தினமணி 09.03.2010
சங்கரன்கோவிலில் குடிநீர் கட்டணம் செலுத்த நாளை கடைசி
சங்கரன்கோவில், மார்ச் 8: சங்கரன்கோவில் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்த புதன்கிழமை கடைசி நாள் ஆகும்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் க. முத்துக்கண்ணு வெளியிட்ட அறிக்கை:
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவற்றை இம்மாதம் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
மேலும், வரி செலுத்தத் தவறினால் ஜப்தி நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரி வசூலிக்கப்படும். இதைத் தவிர்க்க பொதுமக்கள் உடனே வரி செலுத்த வேண்டும் என்றார் அவர்.