Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சங்கரன்கோவிலில் குடிநீர் கட்டணம் செலுத்த நாளை கடைசி

Print PDF

தினமணி 09.03.2010

சங்கரன்கோவிலில் குடிநீர் கட்டணம் செலுத்த நாளை கடைசி

சங்கரன்கோவில், மார்ச் 8: சங்கரன்கோவில் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்த புதன்கிழமை கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் க. முத்துக்கண்ணு வெளியிட்ட அறிக்கை:

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவற்றை இம்மாதம் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேலும், வரி செலுத்தத் தவறினால் ஜப்தி நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரி வசூலிக்கப்படும். இதைத் தவிர்க்க பொதுமக்கள் உடனே வரி செலுத்த வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Tuesday, 09 March 2010 10:05