Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவிநாசி ரோட்டில் வரி வசூல் மையம்

Print PDF

தினமலர் 12.03.2010

அவிநாசி ரோட்டில் வரி வசூல் மையம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், அவிநாசி ரோட்டில் புதிதாக வரி வசூல் மையம் துவக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களிடம், கடந்தாண்டுக்கான வரியினங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, மாநகராட்சி பணியாளர்கள் தீவிர வரி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்களை வசூலிக்க, மாநகராட்சியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரி வசூல் மற்றும் ஜப்தி வாகனமும் மாநகராட்சி பகுதியில் வலம் வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக, மாநகராட்சி சார்பில், அவிநாசி ரோட்டில் புதிதாக வரி வசூல் மையம் துவக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 12 March 2010 06:18