தினமணி 12.03.2010
களக்காடு பேரூராட்சியில் மார்ச் 20-க்குள் வரி செலுத்தாதவர் மீது நடவடிக்கைகளக்காடு, மார்ச் 11: களக்காடு பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரிகளை மார்ச் 20-க்குள் செலுத்தாவிட்டால், குடிநீர் கட்டணம் துண்டிப்பு, நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளில் வசிப்பவர்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, தொழில் உரிமகட்டணம், கடைகள் ஏல உரிம கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை மார்ச் 20-க்குள் பேரூராட்சிஅலுவலகத்தில் செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சட்டப்பூர்வமான நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற தேவையற்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆளாகாமல் உரிய வரிகளை உடனே செலுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.