Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்த நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமணி 15.03.2010

வரி செலுத்த நகராட்சி வேண்டுகோள்

மேட்டூர்,மார்ச் 14: மேட்டூர் நகராட்சியில் சொத்து வரி செலுத்தாதோர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் கே.கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

மேட்டூர் நகராட்சியில் வசிப்போர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகையை உடனடியாக செலுத்தி நகராட்சி கணினி மையத்தில் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

தவறினால், எவ்வித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Last Updated on Monday, 15 March 2010 10:07