Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரிவசூல் செய்வதற்காக விடுமுறை இன்றி பணி

Print PDF

தினமலர் 18.03.2010

வரிவசூல் செய்வதற்காக விடுமுறை இன்றி பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி ஊழியர்கள் வரிவசூல் நடவடிக்கைக்காக விடுமுறை இன்றி பணியாற்றி வருகின்றனர்.திண்டுக்கல் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி வசூலிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக 40 பேர் கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இக்குழுவினர் காலை முதல் மதியம் வரை வரிவசூல் பணியிலும், மதியத்திற்கு மேல் அலுவலக பணியிலும் ஈடுபடுகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே இவர்கள் வார விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை. விடுமுறை நாட்களிலும் வரிவசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி கமிஷனர் முதல் வரிவசூல் பணியாளர்கள் வரை யாரும் விடுமுறை எடுக்கவில்லை.ஊழியர்களின் முயற்சியால் வரிவசூல் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு நல்ல முறையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 18 March 2010 06:23