தினமலர் 22.03.2010
அரக்கோணம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி : மண்டல நகராட்சி இயக்குனர் உத்தரவு
அரக்கோணம் : அரக்கோணம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி அதிகாரிகளுக்கு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார்.அரக்கோணம் நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் வரி மற் றும் வரியில்லா இனங்களின் வசூல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மண்டல நகராட்சி நிர் வாக இயக்குனர் பாலசுப்ரமணியம், நகராட்சி கமிஷனர் விமலா, உதவி இன்ஜினியர் நளினி மற்றும் வருவாய் அலுவலர்கள், உதவியாளர் கள் கலந்து கொண் டனர்.கூட்டத்தில் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:
பொது சுகாதார பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருப்பவர்களிடம் நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்ய வேண்டும். வரி வசூல் செய்வது குறித்து வருவாய் உதவியாளர்களுக்கு அறிவுரை வழங்கியும், வசூலில் பின் தங்கியிருப்பது அதிருப்தியை தருகிறது.வரும் 31ம் தேதிக்குள் அனைத்து வரியினங்களிலும் முழு அளவில் வசூல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி மற்றும் இதர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து அவர், அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் நிலுவை வரியினங்களை செலுத்தியுள்ளார்களா என நேரடியாக ஆய்வு செய்தார்