Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பை துண்டிக்க முடிவு

Print PDF

தினமலர் 22.03.2010

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பை துண்டிக்க முடிவு

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சிக்கு செலுத்த வேண் டிய வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படும் என என நகராட்சி கமிஷனர் மோனி தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோனி கூறியதாவது: பெரியகுளம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, குழாய்வரி, சொத்துவரி மற்றும் குத்தகை இனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கியை மார்ச் 31 க்குள் செலுத்த வேண் டும். பொதுமக்கள் வசதிக்காக அனைத்து நாட்களிலும் வரி வசூல் செய்யப் பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேனி, கம்பம், சின்னமனூர், போடி, கூடலூர் உள்ளிட்ட நகராட்சிகளில் நூறு சதவீதம் வரி வசூல் செய்து வருகின்றனர். பெரியகுளம் நகராட்சி மட்டும் கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட நூறு சதவீதம் வரி வசூல் செய்யவில்லை. சென்ற ஆண்டு கமிஷனர் சரவணக்குமார் அதிகபட்சமாக 95 சதவீதம் வரி வசூல் செய்தார். இந் தாண்டு இது வரை 78 சதவீதம் வசூல் செய்யப் பட்டுள்ளது. மார்ச் 31 க்குள் வரி செலுத்தாவிட்டால் பாதாளசாக் கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப் படும் என்றார்.

Last Updated on Monday, 22 March 2010 10:08