தினமலர் 26.03.2010
ஆனைமலையில் வரி வசூல் தீவிரம்
பொள்ளாச்சி: ஆனைமலையில் 100 சதவீதம் வரி வசூலிக்கதீவிர முயற்சி நடக்கிறது என பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் அறிக்கையில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை மேம்பாடு மற்றும் குடிநீர் திட்டம் சீராக பராமரித்து செயல்படுத்த வரி மிகவும் வசியமாக உள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகைதாரர்களின் உரிம கட்டணம், கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நிலுவையின்றி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். இந்தாண்டில் 100 சதவீத வரியை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; தற்போது 90 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. நடப் பாண்டு முடிவடைய இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் உரிய வரியை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை யை தவிர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.