Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலுவை வரியை உடன் செலுத்தநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

Print PDF

தினமலர் 29.03.2010

நிலுவை வரியை உடன் செலுத்தநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

திருவாரூர்:திருவாரூர் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத நபர்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.திருவாரூர் நகராட்சிக்கு பொதுமக்கள் 2009-10ம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள், குத்தகைதாரர்கள் செலுத்த வேண்டிய குத்தகை இனங்கள், கடை வாடகைகள் ஆகியவற்றை உடனடியாக எந்தவித நிலுவையும் இன்றி செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் செலுத்தாதவர் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் தகுந்த அபராதமும் விதித்து வரிவசூல் செய்யப்படும்.

Last Updated on Monday, 29 March 2010 06:09