தினமலர் 31.03.2010
வரி செலுத்தாததால் கேபிள் 'டிவி' இணைப்பு துண்டிப்பு
போடி:போடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கேபிள் 'டிவி' இணைப்புகளுக்கு வரி செலுத்தாததினால் நான்கு மணி நேரம் கேபிள் இணைப்பை நகராட்சி நிர்வாகம் துண் டித்தது. போடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1600 க்கும் மேற்பட்டகேபிள் இணைப்புகள் உள்ளன. கேபிள் நடத்தி வரும் ஆப்ரேட்டர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகமும் வரி செலுத்த கோரி பல முறை கேபிள் ஆப்ரேட்டர்களிடம் வலியுறுத்தியும் வரி செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் நேற்று நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் நேற்று கேபிள் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் நகராட்சி பகுதியில் கேபிள் 'டிவி' ஒளிபரப்பு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஒன்று கூடி நான்கு மணி நேரத்தில் நகராட்சிக்கு செலுத்த வேண் டிய ஐந்து லட்சத்து11 ஆயிரம் ரூபாய் கேபிள் வரிக் கான நிலுவை தொகையை நகராட்சிக்கு செலுத்தினர். இதையடுத்து கேபிள் ஒளிபரப்பு மீண்டும் துவக்கப் பட்டது.