Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சமத்தூர் பேரூராட்சியில் வரிவசூல் தீவிரம்

Print PDF

தினமலர்        30.03.2011

சமத்தூர் பேரூராட்சியில் வரிவசூல் தீவிரம்


பொள்ளாச்சி : சமத்தூர் பேரூராட்சியில் குடிநீர், சொத்து வரி கட்டணம் வசூலிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமத்தூர் மற்றும் பொன்னாச்சியூர் பகுதிகளில், மொத்தம் 1,528 வீடுகள் உள்ளன. இந்த மாத இறுதிக்குள் குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்பட வேண்டும். இந்நிலையில் அதிகாரிகள், வரிகள் அனைத்தும் வசூலிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுப்பட்டுள்ளனர்.

சமத்தூர் பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: "மொத்தம் சொத்து வரியாக எட்டு லட்சம் வசூலிக்க வேண்டும். அதில், 96 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. குடிநீரின் வரி மூன்றரை லட்சத்தில், 93 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வரிகள் வரும் 31 தேதிக்குள் முழுமையாக வசூலிக்கப்படும். அனைத்து கட்டணமும் வசூலிக்கப்படுவதால், இந்த ஆண்டு செலுத்தாத நிலுவை தொகை இருக்காது' என்றனர்.

 

திருச்சி மாநகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

Print PDF

தினமணி     04.02.2011

திருச்சி மாநகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

  திருச்சி, பிப். 3: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனம் ஆகியவற்றை வசூலிக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை தீவிர வரி வசூல் முகாம் நடைபெறவுள்ளது.

  இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  திருச்சி மாநகராட்சி சட்டம் 126-ன்படி ஒவ்வொரு அரையாண்டும் அந்தந்த அரையாண்டுக்கான சொத்துவரியை அரையாண்டு தொடங்கி 15 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். தண்ணீர் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.

  பிப்ரவரி மாதம் 28-ம் தேதி வரை நடைபெறும் தீவிர வரி வசூல் முகாமில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி போன்ற நிலுவையிலுள்ள அனைத்து வரி இனங்களையும், பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய 4 மண்டல அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களிலோ அல்லது தஞ்சை சாலையிலுள்ள அரியமங்கலம் வார்டு அலுவலகம், சுப்பிரமணியபுரத்திலுள்ள வார்டு அலுவலகம், மேலக் கல்கண்டார்கோட்டை வார்டு அலுவலகம், கேகே நகர் வார்டு அலுவலகம், கள்ளத்தெரு வார்டு அலுவலகம், நந்திகோயில் தெரு வார்டு அலுவலகம், தேவர் ஹால் வளாகத்திலுள்ள வசூல் மையம் ஆகிய இடங்களில் செலுத்தலாம்.

  இந்த வசூல் மற்றும் சேவை மையங்கள் பொதுமக்களின் வசதிக்காக சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

  எனவே, தீவிர வரி வசூல் முனைப்புக் காலமான இந்த மாதம் 28-ம் தேதி வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள வரியினங்கள் மற்றும் நடப்பில் உள்ள வரியினங்களைச் செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குடிநீர் குழாய் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.
 

வரி கட்டாதவர்கள் பெயர் தண்டோரா மூலம் அறிவிப்பு

Print PDF

தினகரன்      03.02.2011

வரி கட்டாதவர்கள் பெயர் தண்டோரா மூலம் அறிவிப்பு

பரமக்குடி, பிப். 3:பரமக்குடி நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிபாக்கிகள் செலுத்தாதவர்கள் பெயர் தண்டோரா மூலம் அறிவிக்கவும், பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஓட்டவும் கமிஷனர் நடவடிக்கை எடுத்தார்.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்பு வீடுகளுக்கான 2010&11வது ஆண்டின் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகள் நகராட்சி நிர்வாகம் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சொத்துவரி பாக்கி ரூ.157 லட்சத்தில் 103 லட்சமும், குடிநீர் கட்டண பாக்கி ரூ.111 லட்சத்தில் 66 லட்சமும், தொழில்வரி பாக்கி ரூ.24 லட்சத்தில் 3 லட்சமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

வரி கட்டாதவர்கள் பட்டியலில் சபை நிர்வாகங்களும், கோயில் டிரஸ்டிகளும் உள்ளனர். பரமக்குடி அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3 லட்சமும், பஸ் ஸ்டாண்டில் உள்ள ஓய்வறைக்கு ரூ.61 ஆயிரமும் வரிபாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. வரி கட்டாதவர்களின் பெயர்கள் 36 வார்டுகளிலும் தண்டோரா மூலம் அறிவிக்கவும், பெயர் பலகையில் நோட்டிஸ் ஓட்டவும் கமிஷனர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கமிஷனர் அட்சயா கூறுகையில், ‘சொத்துவரி, குடிநீர் கட்டணம் கட்டாத நபர்களின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரிபாக்கியுள்ள கடைகளின் உரிமையாளர்கள் பலர் பணம் கட்டி வருகின்றனர். சில மாதங்களில் வரிபாக்கிகள் அனைத்தும் வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.


 


Page 35 of 148