Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

"டாப் 16"வரி பாக்கி வைத்துள்ள அரசு அலுவலகங்கள் : வசூலிக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு

Print PDF

தினமலர்           31.12.2010

"டாப் 16"வரி பாக்கி வைத்துள்ள அரசு அலுவலகங்கள் : வசூலிக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு

மதுரை : மதுரை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள "டாப் 16' அரசு அலுவலகங்கள் பற்றிய விபரம் தெரிய வந்துள்ளது.மதுரை மாநகராட்சிக்கு தனியார் கட்டடங்களைப் போல, அரசு அலுவலகங்களும் சொத்து வரி செலுத்த வேண்டும். ஆண்டுதோறும், மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள் இதை வசூல் செய்ய வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக இது கண்டுகொள்ளப்படவில்லை. அரசு அலுவலகங்களின் உயர் அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்தவில்லை. இப்படியே, பல கோடி ரூபாய் வரி பாக்கி சேர்ந்துள்ளது. இதில் சில அரசு அலுவலகங்கள், "மிரள' வைக்கும் அளவுக்கு பாக்கி வைத்துள்ளன. மாவட்ட விளையாட்டு அலுவலகம் (ரேஸ்கோர்ஸ்) மற்றும் புதூர் "சிட்கோ' அலுவலகங்கள் மட்டும் தலா ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.

அதைத் தொடர்ந்து பாக்கி வைத்துள்ள அரசு அமைப்புகள்:

அரசு போக்குவரத்து கழக கட்டங்கள் - ரூ.80 லட்சம்

வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் - ரூ.56 லட்சம்போலீஸ் ஸ்டேஷன்கள்,
குடியிருப்புகள் - ரூ.50 லட்சம்

பொதுப்பணித்துறை அலுவலகங்கள் - 50 லட்சம்

பூ மார்க்கெட், நெல் மண்டி வளாகம் - ரூ.25 லட்சம்

மத்திய அரசு அலுவகலகங்கள் (வருமான வரி, பி.எஸ்.என்.எல்., தூர்தர்ஷன், ரேடியோ நிலையம், தபால் அலுவலகங்கள்) - ரூ.25 லட்சம்

விரைவு போக்குவரத்து கழக டெப்போ - ரூ.22 லட்சம்

கலெக்டர் அலுவலக கட்டடங்கள் - ரூ.20 லட்சம்

ராமநாதபுர கலெக்டர் பங்களா - ரூ.16 லட்சம்

போலீஸ் கமிஷனர் பங்களா - ரூ.15 லட்சம்

போலீஸ் கமிஷனர் அலுவலகம் - ரூ.13 லட்சம்

கல்வி துறை அலுவலகங்கள் - ரூ.10 லட்சம்

மகளிர் திட்ட அலுவலகம் -ரூ.5 லட்சம்

தீயணைப்பு அலுவலகம் - ரூ.2 லட்சம்

இந்த அலுவலகங்கள் தவிர, சிறு தொகையை பல அலுவலகங்கள் செலுத்த வேண்டி உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத்தொகை வசூலானால், மதுரையில் பல வளர்ச்சி பணிகளை செய்யலாம் என மாநகராட்சி நினைக்கிறது. ஆனால் பாக்கி வைத்துள்ளவை அரசு அலுவலகங்கள் என்பதால், கடும் நடவடிக்கை எடுக்க முடியாமல் மாநகராட்சி தவிக்கிறது.

 

பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் வரிவசூல் வாகனம் செல்லும் இடங்கள்

Print PDF
தினமலர்       24.12.2010

பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் வரிவசூல் வாகனம் செல்லும் இடங்கள்

திருநெல்வேலி : பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் நடமாடும் வரிவசூல் வாகனத்தில் வரியினங்களை செலுத்தலாம் என கமிஷனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சிக்கு செலுத்தப்படவேண்டிய சொத்துவரியினை ஒவ்வொரு அரையாண்டும், வரிவிதிப்பாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டும். சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் போன்ற வரியினங்கள் வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை (25ம் தேதி), 26ம் தேதிகளில் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி இனங்களை நெல்லை மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனத்தில் செலுத்தலாம். நடமாடும் வரிவசூல் வாகனம் வி.எம்.சத்திரம், மகாராஜநகர், பகுதிகளுக்கு 25ம் தேதியும், திருமால்நகர், தியாகராஜநகர் பகுதிகளுக்கு 26ம் தேதியும் வரும். பொதுமக்கள் தங்களுடைய வரி மற்றும் நிலுவை வரிகளை நெல்லை மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனத்தில் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்கலாம். இவ்வாறு கமிஷனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
 

மாநகராட்சி எல்லையில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரியை உயர்த்த கடும் எதிர்ப்பு

Print PDF

தினகரன்     17.12.2010

மாநகராட்சி எல்லையில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரியை உயர்த்த கடும் எதிர்ப்பு

புதுடெல்லி,டிச.17: மாநகராட்சி எல்லைக்கு மிக அருகில் இருக்கும் குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் சொத்து வரியை உயர்த்த மாநகராட்சி ஆய்வுக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க, மாநகர எல்லைக்கு மிக அருகில் உள்ள 168 குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு சொத்து வரி விதிக்க மாநகராட்சி மதிப்பீட்டுக் குழு முடிவு செய்தது.

இதற்காக ஏற்கனவே இருந்து வரும் மாநகராட்சி மதிப்பீட்டு வழிகாட்டி முறைகளில் சில மாற்றங்களை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி மாநகராட்சியின் தன்மைக்கு ஏற்ப நகரப்பகுதிகள், ‘ஏ’ முதல் ‘எச்’ வரை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ‘பி’ பிரிவில் உள்ள 12 குடியிருப்புகள் ‘ஏ’ பிரிவுக்கும், ‘சி’ பிரிவில் உள்ள 20 குடியிருப்புகள் ‘பி’ பிரிவுக்கும், ‘டி‘ பிரிவில் உள்ள 42 குடியிருப்புகள் ‘சி’ பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளன.

இப்போது மாநகராட்சிக்கு வீட்டு வரியின் மூலம் ஆண்டுக்கு ரூ. 696.46 கோடி வருவாய் கிடைக்கிறது. புதிய மாநகராட்சி வழிகாட்டு மதிப்பீட்டின் மூலமும் திருத்தப்பட்ட வரி விதிப்பின் மூலமும் மாநகராட்சிக்கு 2010&11 ம் ஆண்டு, வீட்டு வரியாக மட்டும் ரூ. 1660 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி வழிகாட்டு மதிப்பீட்டு குழு கொடுத்த இந்த சிபாரிசின் அடிப்படையில் மாநகராட்சி எல்லைக்கு அருகில் உள்ள 168 குடியிருப்புகள் வருகின்றன. அந்த குடியிருப்புகளுக்கு புதிதாக வரி விதிக்கப்படுவதுடன், ஏற்கனவே இருந்த பிரிவுகளில் இருந்து வேறு பிரிவுக்கு மாற்றியதால் இனிமேல் ஏராளமானவர்கள் கூடுதலாக சொ த்து வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இதுபற்றி ஆராய மாநகராட்சி பா.ஜ. உறுப்பினர் வி.பி.பாண் ட்யா தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை மாநகராட்சியிடம் நேற்று தாக்கல் செய்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நகர சொத்துக்களுக்கான(வீடுகளுக்கான) மதிப்பீடு அது அமைந்துள்ள இடம், அங்கு நிலவும் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் உட்பட அடிப்படை வசதிகளை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் அடிப்படை வசதிகளில் எதையுமே அதிகரிக்காமல், பிரிவுகளை மாற்றி அமைப்பதன் மூலம் வீடுகளுக்கு கூடுதலாக வரி விதிப்பதை இக்குழு நிராகரிக்கிறது.

அதேசமயம் அந்தப் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றுக்கு கூடுதலாக வரி விதிக்க இருப்பதை இக்குழு ஏற்றுக் கொள்கிறது. டெல்லி மேம்பாட்டு ஆணையப் பகுதியில் உள்ள டிரான்ஸ் யமுனா பகுதி வீடுகளுக்கான சொத்து வரியை உயர் த்தவும் இக்குழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு அந்த ஆய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி மாநகராட்சி நிலைக் குழு தலைவர் யோகேந்தர் சந்தாலியா, நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசை அப்படியே அமல்படுத்தியிருந்தால் டெல்லி நகர வாசிகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியிருப் பார்கள். இப்போது 9 லட்சம் பேர் மட்டுமே சொத்துவரி செலுத்துகின்றனர். 22 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துவதில்லை. அவர்களிடம் முறையாக சொத்து வரி வசூலித்தாலே மாநகராட்சியின் வருவாய் தானாக உயர்ந்து விடும்.

இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் மாநகராட்சி அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அதன் மீது பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுடன் சேர்த்து இந்த பரிந்துரை, நிலை குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்படும்.

அதன்பிறகு இதுபற்றி ஆலோசித்து மாநகராட்சி நிலைக் குழு தனது இறுதி முடிவை அறிவிக்கும். இவ்வாறு நிலைக் குழு தலைவர் சந்தாலியா கூறினார்.

 


Page 37 of 148