Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

டிச.15ம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்

Print PDF

தினமணி            07.12.2010

டிச.15ம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 6: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 2010-11-ம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகைகளை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் க.முத்துக்கண்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:

2010-2011-ம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், ஆக்கிரமிப்புக் கட்டணம், குத்தகைக் கட்டணம், தொழில்களின் உரிமைக் கட்டணம், என்.ஆர்.ஒய். மற்றும் எல்.சி.எஸ். கடன் ஆகிய அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களையும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

நகராட்சி கடைகளின் வாடகையை நிலுவையின்றி ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் நகராட்சி கணினி மையத்தில் செலுத்தி உடனே ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் வரி, வரியில்லா இனங்களைச் செலுத்தத் தவறினால் முன்அறிவிப்பு இன்றி, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். 1920-ம் ஆண்டு, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டப்பட்டி மேற்படி சொத்துக்கள், நகராட்சி மூலம் முன்னறிவிப்பு இன்றி ஜப்தி செய்யப்படும் என்று ஆணையர் முத்துக்கண்ணு தெரிவித்துள்ளார்.

 

"தச்சநல்லூர் மக்கள் பழைய குடிநீர் கட்டணம் செலுத்தினால் போதும்'

Print PDF

தினமணி             07.12.2010

"தச்சநல்லூர் மக்கள் பழைய குடிநீர் கட்டணம் செலுத்தினால் போதும்'

திருநெல்வேலி, டிச. 6: தச்சநல்லூர் மக்கள் பழைய குடிநீர் கட்டணம் செலுத்தினால் போதும் என திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தச்சநல்லூர் மண்டலம் 1,2,3,4,55 வார்டுகளில் வீட்டு குடிநீர் கட்டணம் ரூ. 50 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குடிநீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு 2007-ல் புதிய குடிநீர் திட்டம் அந்த வார்டுகளுக்கு செயல்படுத்தப்பட்டது.

இதற்காக உலக வங்கியிடம் கடன் பெறப்பட்டது. வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துவதற்காக மாதம் ரூ. 125 குடிநீர் கட்டணம் வசூலிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதேபோல, தியாகராஜநகர், என்.ஜி.. காலனி, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ. 22.22 கோடி ஜெர்மன் வங்கியில் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திட்டங்களுக்கான கடனை திருப்பிச் செலுத்த அரசின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் இணைப்புகளுக்கு ஒரே சீராக மாதம் ரூ. 100 குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானத்தின் படியே கடந்த 1-7-2010 முதல் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே ஓர் அமைப்பு, தச்சநல்லூரில் குறிப்பிட்ட வார்டுகளில் ரூ. 125 குடிநீர் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைக்காலத் தடை பெற்றது.

மேலும், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை பழைய கட்டணமான ரூ. 50 வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே இறுதித் தீர்ப்பு வரை அந்தப் பகுதி மக்கள் ரூ. 50 குடிநீர் கட்டணம் செலுத்தினால்போதும். எனவே அப் பகுதி மக்கள் வீணான வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம். போராட்டங்கள் எதுவும் நடத்த தேவையில்லை என்றார் சுப்பிரமணியன்.

 

பாதாள சாக்கடை கட்டணம் குறைக்க பரிசீலனை : மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர்              07.12.2010

பாதாள சாக்கடை கட்டணம் குறைக்க பரிசீலனை : மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை : ""மதுரையில் பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணத்தை குறைப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்,"" என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறினார்.

மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சாலைகளை செப்பனிட டெண்டர் விடப்பட்டுள்ளது. மழை நின்றதும், பணிகள் துவங்கும். பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணமாக முன்பு வீடுகளுக்கு மாதத்திற்கு 30 ரூபாய், தொழிற்சாலைக்கு 150 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு 90 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது வீடுகளுக்கு மாதம் 125 ரூபாய், தொழிற்சாலைக்கு 375 ரூபாய், வணிக நிறுவனத்திற்கு 250 ரூபாய் என மாற்றப்பட்டுள்ளது.

31.11.2003ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, பாதாள சாக்கடை பணிகள் முடிந்ததும், கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு பாதாள சாக்கடை பராமரிப்பு செலவு மட்டும் 36 கோடி ரூபாய் ஆகிறது. தற்போது நகரில் 94 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. மேலும் 60 ஆயிரம் இணைப்புகள் வர இருக்கின்றன. 30 பம்பிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. இச்செலவால் நிதி நிலைமை பாதிக்கப்படும். ஒரு நாளைக்கு 107 லட்சம் மில்லியன் லிட்டர் சாக்கடை நீர், பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்படுகிறது. எனினும் பாதாள சாக்கடை கட்டண உயர்வை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

 


Page 41 of 148