Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

தச்சநல்லூர் மண்டலத்தில் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு மாதம் ரூ.50 செலுத்தினால் போதும் மேயர் தகவல்

Print PDF

தினகரன்           07.12.2010

தச்சநல்லூர் மண்டலத்தில் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு மாதம் ரூ.50 செலுத்தினால் போதும் மேயர் தகவல்

நெல்லை, டிச.7: நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட வார்டுகளில் வீட்டு குடி நீர் இணைப்பிற்கு மாதம் ரூ.50 கட்டணமாக செலுத்தினால் போதும் என மேயர் சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நெல்லை மாநகராட்சியிலுள்ள 1,2,3,4 மற்றும் 55 வார்டுகளில் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு மாதம் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பகுதியிலுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் விதத்தில் மாநகராட்சி, குடி நீர் வடிகால் வாரியம் மூலம் புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்கி 2007ம் ஆண்டு முதல் போதுமான அளவு குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் பெறப்பட்டது. எனவே வாங் கிய பணத்தை திருப்பி செலுத்த, உலக வங்கி மற்றும் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி இப்பகுதியிலுள்ள குடிநீர் இணைப்பிற்கு மாதம் ரூ.125 வசூலிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையில் மக்கள் நுகர் வோர் கூட்டமைப்பினர் மதுரை ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்து இந்த வழக் கில் ரூ.125 வசூ லிக்க இடைக்கால தடை யும் வழக் கில் இறுதி தீர்ப்பு பெறப்படும் வரை தற்போதுள்ள படி மாதக்குடிநீர் கட்டணமாக ரூ.50ம் பயனாளிகள் செலுத்த வேண்டுமென்று கடந்த 3&3&2010 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இறுதி தீர்ப்பு வரும் வரை மாதம் ரூ.50ஐ குடிநீர் கட்டணமாக பொதுமக்கள் செலுத்தினால் போதும். பின்னர் இறுதி தீர்ப்பு முடிவுப்படி குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இப் பகுதி மக்கள் வீணான வதந்திகளை நம்ப வேண்டாம். போராட்டங்கள் ஏதும் நடத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன்            07.12.2010

பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்த மாநகராட்சி முடிவு

மதுரை, டிச. 7: மதுரை நகரில் பாதாள சாக்கடை கட்டணம் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. தற்போதுள்ள மாத கட்டணத்தை வீடுகளுக்கு ரூ.30ல் இருந்து ரூ.125, வணிக கட்டிடங்களுக்கு ரூ. 90ல் இருந்து ரூ.250, தொழிற்சாலைக்கு ரூ.150ல் இருந்து ரூ.375 ஆக உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு ஆண்டுக்கு பாதாள சாக்கடை கட்ட ணம் ரூ. ரூ.360ல் இருந்து ரூ.ஆயிரத்து 500 ஆக உயரும். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.. செயலாளர் தளபதி தலைமையில் கவுஸ்பாட்சா எம்.எல்., கட்சி நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி ஆணை யாளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்தி வேல் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் 1396984945 வீடுகளுக்கு பாதாள சாக்கடை கட்டண உயர்வு அதிக அளவாக உள்ளது. முந்தைய அரசு 2003ல் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வை நிறுத்தி வைத்து, தற்போதுள்ள கட்டணத் தையே வசூலிக்க வேண்டும். கட்டண உயர் வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என கோரி உள் ளார். இது குறித்து ஆணை யாளர் செபாஸ்டின் நிருபர்களிடம் கூறுகையில்,

`மதுரை நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மத்திய, மாநில அரசு நிதி அளித்துள்ளது. மாநகராட்சி பங்கு தொகை ரூ. 55 கோடி கடன் பெற்று அளிக்கப்பட்டுள்ளது. 2003ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க திட்டமிடப்பட்டது.பாதாள சாக்கடை பராமரிப்பு செலவு ஆண் டுக்கு ரூ.36 கோடியாக அதிகரித்துள்ளது. தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட மனு குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றார். மேயர் தேன் மொழி உடன் இருந்தார்.

 

நிலுவையின்றி வரி செலுத்த, நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Print PDF

தினமலர்        06.12.2010

நிலுவையின்றி வரி செலுத்த, நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

ஓசூர்: "ஓசூரில் வரி கட்டாமல் ஏமாற்றினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ' என நகராட்சி கமிஷனர் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:ஓசூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இதனால், இப்பகுதியில் நகராட்சி மூலம் பல்வேறு நகர அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளது.அதனால், பொதுமக்கள், வணிகர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரி, வரியில்லா இனங்களை உடனே செலுத்த வேண்டும். அதே போல், நகராட்சி வணிவளாகம், பஸ்ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்களும் மாதந்தோறும் முறையாக நகராட்சிக்கு வாடகை பணத்தை கட்ட வேண்டும்.வாடகை மற்றும் வரிசெலுத்தாமல் நகராட்சியை ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், பொதுமக்கள், வணிகர்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

 


Page 42 of 148