Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சி அறிவிப்பு : அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளுக்கு சொத்துவரி விலக்கு

Print PDF

தினகரன் 03.12.2010

மாநகராட்சி அறிவிப்பு : அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளுக்கு சொத்துவரி விலக்கு

புதுடெல்லி, டிச. 3:

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்கள், புறநகர் கிராமங்களில் வசிப்பவர்கள் இனிமேல் சொத்துவரி செலுத்த தேவையில்லை. அவர்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா அறிவித்துள்ளார்.

டெல்லி மாநகராட்சியில் 1,639 குடியிருப்புகள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்றன. இந்த குடியிருப்புக்களுக்கு முறையாக அங்கீகாரம் வழங்கும் வரை சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் 2 நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிகப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி நிலைக்குழு கூட்டம், அதன் தலைவர் யோகேந்தர் சந்தோலியா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்களுக்கும், நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் யோகேந்தர் சந்தோலியா கூறியதாவது:

மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 1,639 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்களுக்கும், புறநகர் பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கும் சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும். அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள்ளில் வசிப்பவர்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களில் வசிப்பவர்களிடம் இருந்தும் இனிமேல் சொத்து வரி வசூலிக்கத் தேவையில்லை.

டெல்லியில் இருக்கும் 35 லட்சம் சொத்துக்களில் 9 லட்சம் சொத்துக்களின் உரிமையாளர்கள் மட்டுமே இப்போது சொத்து வரி செலுத்துகின்றனர். எனவே நகரில் இருக்கும் சொத்துக்களுக்கான வரி வசூலிப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்கள், நகர்ப்புற மற்றும் புறநகர் கிராமங்களில் உள்ள சொத்துக்களுக்கு வரி செலுத்தும்படி அதன் சொந்தக்காரர்களுக்கு வரி கேட்பு மனு எதுவும் அனுப்ப வேண்டாம் என்று மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யோகேந்தர் சந்தோலியா கூறினார்.

 

சொத்து வரி, தொழில் வரி: உடனே செலுத்த சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமணி               02.12.2010

சொத்து வரி, தொழில் வரி: உடனே செலுத்த சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை, டிச. 1: சொத்து வரி, தொழில் வரி ஆகிய வரிகளை உடனே செலுத்துமாறு சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி செலுத்துவதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அப்போது வரி செலுத்தத் தவறியவர்கள் இப்போது செலுத்துவதற்காக சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் உடனடியாக வரியைச் செலுத்துவதன் மூலம் கால தாமதத்தையும் அபராதத்தையும் தவிர்க்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சொத்து வரி, தொழில் வரி மாநகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமலர்         02.12.2010

சொத்து வரி, தொழில் வரி மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை : குறிப்பிட்ட காலத்தில் சொத்து வரி, தொழில் வரி செலுத்தி, அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சொத்து வரி செலுத்துவதற்கான அரையாண்டு காலக்கெடு, அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடைந்தது. பொதுமக்கள் உடனே சொத்து வரியை செலுத்தி அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபோல், தொழில் வரி செலுத்துபவர்களும் காலதாமதம் செய்யாமல், வரியை கட்டுமாறு கேட்டு கொள்ளபட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 206 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 44 of 148