Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வந்தவாசியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 11.10.2010

வந்தவாசியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையாளர் எச்சரிக்கை

வந்தவாசி, அக். 11: வந்தவாசி நகராட்சி ஆணையாளர் என். உசேன்பாரூக்மன்னர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகராட்சியில் ரூ4.50 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிய பஸ்நிலையத்திலிருந்து திண்டிவனம் சாலையை இணைக்கும் புதிய சாலை ரூ2 கோடியில் அமைப்பட உள்ளது. ரூ75 லட்சத்தில் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

அதேபோல் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள உள்ளதால், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர், தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை பாக்கிகளை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிக அளவில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும். இதனை தவிர்க்க பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை உடனடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அக்., 15க்குள் குடிநீர் கட்டணம் செலுத்தணும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 08.10.2010

அக்., 15க்குள் குடிநீர் கட்டணம் செலுத்தணும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

திருச்சி: "திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் கேட்புத் தொகையை வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என கமிஷனர் பால்சாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு கட்டடங்கள், வணிக உபயோகக் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு பின்வரும் கட்டண விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது.வீட்டுப் பயனுக்கு (வகிதாச்சார அடிப்படையில்) முதல் குழாய் மாதம் 100 ரூபாய், இரண்டாம் குழாய் மாதம் 125 ரூபாய், மூன்றாம் குழாய் மாதம் 150 ரூபாய்; குடிநீர் அல்லாத பயனுக்கு குறைந்தபட் கட்டணம் 1,000 லிட்டருக்கு 50 ரூபாய், ஒரு மாதம் 500 ரூபாய் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆயிரம் லிட்டர் 100 ரூபாய் ஒரு மாதத்துக்கு 800 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேற்படி கட்டண விகிதங்களின் அடிப்படையில் வீட்டு உபயோகப் பயனுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை கேட்பு எழுப்பப்பட்டும், குடிநீர் அல்லாத பயனுக்கான இணைப்புக்கு (வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கான இணைப்புகள்) மாதம்தோறும் கேட்பு எழுப்பப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.குடிநீர் கட்டண நிலுவை மற்றும் நடப்பு கேட்பு விவரங்களை ஏற்கனவே மாநகராட்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தியோ அல்லது கம்ப்யூட்டர் வரிவசூல் மையங்களை நேரடியாக அணுகி தங்களது வரிவிதிப்பு எண்ணை தெரிவித்து, நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகையை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, திருச்சி மாநகராட்சிப் பகுதியிலுள்ள குடியிருப்பு, வணிக வளாகம், தொழிற்சாலை கட்டடம் உரிமையாளர்கள் தாங்கள் மாகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணங்களை மாநகராட்சி மையம் அலுவலகம், நான்கு கோட்ட அலுவலகங்கள், சேவை மையங்கள், நடமாடும் வரிவசூல் மையம் ஆகிய இடங்களில் நிலுவையின்றி 15ம் தேதிக்குள் செலுத்தி உரிய ரசீதைப் பெற்றுக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர் மூலம் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

வளர்ப்பு நாய்க்கு வரி ஏய்ப்பு மாநகராட்சிக்கு ரூ1 கோடி இழப்பு

Print PDF

தினகரன் 07.10.2010

வளர்ப்பு நாய்க்கு வரி ஏய்ப்பு மாநகராட்சிக்கு ரூ1 கோடி இழப்பு

மும்பை,அக்.7: நாய் வளர்ப்பவர்கள் அதற்கு வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்வதால் மாநகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் 27,147 வளர்ப்பு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வளர்ப்பு நாய்களுக்கு அதன் உரிமையாளர் கள் மாநகராட்சியிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். அதோடு ஒவ்வொரு ஆண்டும் இதற்கு 100 ரூபாய் வரி செலுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலானோர் தங்களது நாய்களுக்கு லைசென்ஸ் வாங்குவதில்லை. நகரில் 7,652 பேர் மட்டுமே தங்களது நாய்களுக்கு லைசென்ஸ் எடுத்துள்ளனர். எஞ்சியவர்கள் லைசென்ஸ் எடுக்காமல் மாநகராட்சியை ஏமாற்றி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இவ்வாறு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் எடுக்கவில்லையெனில் அவற்றை பறிமுதல் செய்வோம் என்று நாய் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தது. அப்படி இருந்தும் இன்னும் 20 ஆயிரம் பேர் தங்களது வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் எடுக்காமல் இருக்கின்றனர்.

நகரில் நாய் கடிகளில் 25 சதவீதம் வளர்ப்பு நாய்களால் ஏற்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாய்களுக்கு லைசென்ஸ் எடுத்திருந்தால் அவற்றிற்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும். இதனால் நாய் கடியால் பிரச்னை வராது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டி.அம்பே அளித்த பேட்டியில்,’ வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அவற்றிற்கு லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்று நினைக்க மறுக்கிறார்கள். அவர்கள் வார்டு அலுவலகத்திற்கு வர விரும்புவதில்லைஎன்று தெரிவித்தார். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் எடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.

லைசென்ஸ் எடுப்பதால் என்ன பலன் என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைவரும் லைசென்ஸ் எடுக்க முன் வருவார்கள் என்று விலங்குகள் நல ஆர்வலர் அனுராதா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாய்களுக்கு லைசென்ஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டத்தை விரைவில் மாநகராட்சி கொண்டுவர இருக்கிறது.

 


Page 56 of 148