Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்தாவிட்டால் செப்.27 முதல் ஜப்தி

Print PDF

தினமணி 24.09.2010

வரி செலுத்தாவிட்டால் செப்.27 முதல் ஜப்தி

திருநெல்வேலி,செப்.23: பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாவிட்டால், இம் மாதம் 27 ஆம் தேதி முதல் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அம் மண்டல உதவி ஆணையர் பாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு இம் மாதம் 30 ஆம் தேதி வரையிலான காலத்திற்குரிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை உடனே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் சிலர் இன்னும் சொத்து வரியையும்,குடிநீர் கட்டணத்தையும் செலுத்தாமல் உள்ளனர். வரி செலுத்தாத மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டடங்களில் இம் மாதம் 27 ஆம் தேதி முதல் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்த, பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் ஒரு வீடு மற்றும் வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3 வீடுகள் என மொத்தம் 4 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் வியாழக்கிழமை தூண்டிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

சொத்து & குடிநீர் வரியை உடனே செலுத்தவேண்டும் செய்யாறு நகர வளர்ச்சிக்குஆணையாளர் வேண்டுகோள்

Print PDF

தினகரன் 21.09.2010

சொத்து & குடிநீர் வரியை உடனே செலுத்தவேண்டும் செய்யாறு நகர வளர்ச்சிக்குஆணையாளர் வேண்டுகோள்

செய்யாறு, செப்.21: செய்யாறு நகர வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற சொத்து, குடிநீர் வரியை உடனே செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் எம்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்யாறு நகராட்சி ஆணையாளர் எம்.ராஜா நிருபர்களிடம் கூறியது:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் இயற்கை இடர்பாடுகள் நிவாரண திட்டத்தின்கீழ் செய்யாறு நகராட்சிக்கு ரூ

8 லட்சம் வழங்கினார். அதன்மூலம் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தற்போது நகரில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருவோத்தூரில் கட்டப்பட்டுள்ள 24 மணி நேர மருந்தகத்திற்கு, மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனம் செய்ய, அரசிடம் கோரியுள்ளோம். பணியாளர் நியமனத்துக்கு பின் மருந்தகம் துவங்கப்படும்.

நகராட்சி வளாகத்தில் ரூ48லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடத்தில், ரூ25 லட்சம் செலவில் ஐ டெக் வசதிகள் செய்ய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நகரின் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நிலுவையில் உள்ள குடிநீர், சொத்து, தொழில் வரிகளை உடனடியாக பொதுமக்கள் செலுத்தவேண்டும்.

தெருவிளக்கு, துப்புரவு பணி, சாலை வசதி, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து நகராட்சிக்கு 222307 என்ற தொலைபேசியிலும், 93449 45304 என்ற செல் போனிலும் புகார் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

சேலம் மாநகராட்சியில் தினமும் வரி வசூல் பணி குறித்து ஆய்வு

Print PDF

தினமலர் 21.09.2010

சேலம் மாநகராட்சியில் தினமும் வரி வசூல் பணி குறித்து ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் வரி வசூல் பணி குறித்து தினமும் உதவி வருவாய் ஆய்வாளர்களிடம் நேரடி ஆய்வு செய்யப்படுகிறது.சேலம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை வசூல் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் ஆட்டோக்கள் மூலம் நிலுவை தொகையை செலுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர். நான்கு மண்டல அலுவலகங்களிலும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. வரி வசூல் பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்க தினமும் அப்பணி குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நான்கு மண்டலத்திலும் பணியாற்றும் உதவி வருவாய் ஆய்வாளர்களிடம் தினமும் வசூல் செய்யப்படும் நிலுவை தொகை குறித்த விவரங்களை மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி ஆய்வு செய்கிறார். வரி வசூல் குறையும் வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு உதவி வருவாய் ஆயவாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.தினமும் வரி வசூல் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்வதால், உதவி வருவாய் ஆய்வாளர்கள் ஒவ்வொரு வார்டிலும் நிலுவை வரிகளை வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதல் தொகை வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Page 61 of 148