Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

திருச்சி மாநகராட்சி வரி வசூல் வாகனம்ரூ.30 லட்சம் வசூலித்து புதிய சாதனை

Print PDF

தினமலர் 16.09.2010

திருச்சி மாநகராட்சி வரி வசூல் வாகனம்ரூ.30 லட்சம் வசூலித்து புதிய சாதனை

திருச்சி: திருச்சி மாநகராட்சி வரி வசூல் வாகனம் செயல்பாடு துவங்கி, ஒரு மாதம் நிறைவடையும் முன்பே 30 லட்சம் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.திருச்சி மாநகராட்சியில் சொத்து, குடிநீர், காலி மனை உள்ளிட்ட இனங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. வரி அல்லாத இனங்களான கடை வாடகை, ஏலத் தொகை போன்றவையும் வசூலிக்கப்படுகிறது. மாநரகாட்சியிலிருந்து வரி மற்றும் வரி அல்லாத இனங்கள் மூலம் வசூலாகும் தொகை வங்கியில் செலுத்தி முறையாக செலவிடப்படுகிறது.மாநகராட்சி அலுவலகம், ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய நான்கு கோட்ட அலுவலகங்களிலும் வரி செலுத்தலாம்.

 வரி முறையாக செலுத்தவர்கள் மீது, மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனால், தற்போது வரி செலுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.வரி செலுத்த எண்ணும் சிலருக்கு இயற்கையாகவே பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதை உணர்ந்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பணத்தை வசூல் செய்யும் வகையில்,"நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மைய வாகனம்' திட்டத்தை செயல்படுத்த துவங்கியது.வரி வசூல் வாகனம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி துவங்கப்பட்டது. இதில், இரண்டு வரி செலுத்தும் கவுன்டர்கள் உள்ளன.

மாதத்தில் வாரம் ஒரு கோட்டம் வீதம் நான்கு கோட்டத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படும். இதற்கான இடம், நேரம் ஏற்கனவே முன்னதாக அறிவிக்கப்படுகிறது.இதனால், அந்தந்த பகுதி மக்கள் அலைச்சல், நேரம் மிச்சமாவதோடு மாநகராட்சிக்கு வரவேண்டிய வரியும் உடனடியாக கிடைக்கிறது. "ஆக்ஸிஸ்' வங்கி ஊழியர்கள் பணத்தை பெற்றுச் செல்கின்றனர். இந்த வாகனம் செயல்பாடு துவங்கி நேற்றுடன் ஒரு மாதம் முடிவடைகிறது. ஒரு மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே 30 லட்சம் ரூபாய் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

 

வார்டு அலுவலகங்களிலும் சொத்துவரி வசூலிப்பு மையங்கள்

Print PDF

தினமலர் 15.09.2010

வார்டு அலுவலகங்களிலும் சொத்துவரி வசூலிப்பு மையங்கள்

சென்னை : சென்னை மாநகராட்சியில் 155 வார்டு அலுவலகங்களிலும் சொத்து வரி வசூலிப்பதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் சொத்து வரி வசூலிப்பது தான்.கடந்த 2009-2010ம் ஆண்டு 362 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநாராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்திலும், 10 மண்டல அலுவலகங்களிலும் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.மேலும், சொத்துவரி வசூலிப்பவர்கள் கையடக்க கருவிகள் மூலம் வீடு வீடாக சென்று சொத்துவரி வசூலிக்கின்றனர்.இந்நிலையில் சொத்து வரி வசூலிப்பை மேலும் எளிமைப்படுத்த சென்னை மாநகராட்சி அனைத்து வார்டு அலுவலகங்களிலும் சொத்து வரி வசூலிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேயர் சுப்ரமணியன் நேற்று தி.நகர் 126 வார்டு அலுவலகத்தில் தொடங்கி வைத்து கூறியதாவது:மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பை மேலும் எளிமைப்படுத்த 155 வார்டு அலுவலகங்களிலும் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.அந்தந்த வார்டுகளில் உள்ள பொதுமக்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள சிறப்பு கவுன்டரில் சொத்துவரி செலுத்தலாம். சொத்து வரி செலுத்த பொதுமக்கள் இனி மண்டல அலுவலகங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.வார்டு அலுவலகங்களில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்டர்கள் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்.காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வார்டு அலுவலக சிறப்பு கவுன்டரில் சொத்துவரி செலுத்தலாம்.வாரம்தோறும் திங்கட்கிழமை சிறப்பு கவுன்டருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிப்பதால் சொத்து வரி வசூலிப்பு தொகை மேலும் கூடுதலாக வாய்ப்புள்ளது.இவ்வாறு மேயர் கூறினார்.

 

கட்டடங்களுக்கான உடனடி வரி விதிப்பு சேவை

Print PDF

தினமணி 14.09.2010

கட்டடங்களுக்கான உடனடி வரி விதிப்பு சேவை

திருநெல்வேலி, செப். 13: திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் கட்டடங்களுக்கான உடனடி வரி விதிப்பு சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாநகராட்சி ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்டடங்களுக்கான உடனடி வரி விதிப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு கட்டடத்தின் உரிமையாளரே, தாம் கட்டியுள்ள கட்டடத்தின் வெளிப்புற அளவு, கட்டட பயன்பாடு, கூரையின் தன்மை, கட்டுமானம் முடிவுற்ற காலம், கட்டுமானம் அமைந்துள்ள வார்டு எண், இடம் ஆகிய விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் கட்டடம் உள்ள நிலத்தின் பத்திரம் நகல், கட்டட அனுமதி பெற்ற வரைபட ஆவணம் (தலா 2 பிரதிகள்) ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பெறும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் ஆகியோர், அந்த கட்டடத்தை உடனே ஆய்வுசெய்து, அன்றைய தினமே வரி செலுத்துவதற்கான சிறப்பு அறிவிப்பு ஆணையை வெளியிடுவார்கள். அதே வேளையில் ஆவணங்களில் குறைபாடும், தகவல்கள் தவறாக இருந்தால் மாநகராட்சி கொடுத்த ஆணை ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, புதிய வரி விதிக்கப்படும்.

இதன் மூலம் மாநகராட்சி நிர்வாகத்தின் ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான தன்மை உறுதி செய்யப்படும். மாநகராட்சியின் வருமானம் அதிகரிக்கும், மக்கள் எளிதாக வரி செலுத்த முடியும், கால விரயம் தவிர்க்கப்படும் என்றார் மேயர். முன்னதாக ஏற்கெனவே விண்ணப்பித்த 3 பேருக்கு வரி செலுத்துவதற்கான சிறப்பு ஆணையை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந் நிகழ்ச்சியில் துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் என். சுப்பையன், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், மண்டலத் தலைவர்கள் எஸ்.விஸ்வநாதன், பூ. சுப்பிரமணியன், எஸ்.எஸ். முகம்மது மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 63 of 148