Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி வசூல் பணியில் அலட்சியம்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 08.09.210

வரி வசூல் பணியில் அலட்சியம்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

சேலம்: "" சேலம் மாநகராட்சி வரி வசூல் பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தலைமையில், நேற்று வரி வசூல் பணி குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கமிஷனர் பழனிசாமி பேசியதாவது: சேலம் மாநகராட்சியில் நிதி ஆதாரத்தை பெருக்கவும், புதிய நலத்திட்டப்பணிகளை மேற்கொள்வதும் அவசியம். தவிர, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சார துறைக்கும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை கட்டணமாக செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை அதிகாரிகள் முனைப்புடன் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு முறையாக வரி விதிப்பு செய்ய வேண்டும். சொத்துவரி உள்ளிட்டவற்றை செலுத்த வருபவர்களுக்கு முறையாக விண்ணப்பம் வினியோகம் செய்து கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். வரி வசூல் பணியில் அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி பணியாளர்கள் மீது மாநகராட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். மாநகராட்சி உதவி கமிஷனர்கள், உதவி வருவாய் ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

மாநகராட்சி சொத்து குத்தகை விடப்படாது நிலைக்குழு அதிரடி முடிவு

Print PDF

தினகரன் 08.09.2010

மாநகராட்சி சொத்து குத்தகை விடப்படாது நிலைக்குழு அதிரடி முடிவு

பெங்களூர், செப். 8: பெருநகர் மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துகளை இனி யாருக்கும் குத்தகை வழங்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக சொத்து பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் கீதா சீனிவாசரெட்டி தெரிவித்தார்.

பெங்களூர் மாநாகராட்சியின் 2010&11ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீது விவாதம் கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி கூட்டத்தில் நேற்று சொத்து பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் கீதா சீனிவாசரெட்டி பேசியதாவது:

மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி நிலையம், மருத்துவமனை, முதியோர் இல்லம், வர்த்தக கட்டிடம் கட்டி லட்சகணக்கில் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். மாநகரின் இருதய பகுதியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மாநகராட்சி சொத்தை குத்தகை கொடுத்துள்ளதால், மாநகராட்சிக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மாநகரில் பெரும்பாலான நிலம் மற்றும் கட்டிடங்களை சமூக சேவை என்ற அடிப்படையில் கல்வி நிலையம் தொடங்க குத்தகை எடுத்துள்ள அறககட்டளைகள் கல்வியை வியாபாரமாக்கி மாணவர்களிடம் ஆயிரம் கணக்கில் நன்கொடை வசூலித்து வருகிறார்கள். சிலர் நிலத்தை குத்தகை எடுத்து பெரிய வர்த்தக நிலையங்கள், அப்பார்ட்மெண்ட்கள் கட்டி கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறார்கள். இவர்கள் மூலம் மாநகராட்சிக்கு நூற்றுககணக்கில் மட்டுமே வாடகை கிடைக்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட சொத்துகளின் குத்தகை காலம் முடிந்திருந்தும், இன்னும் மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல் காலம் கடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் நோக்கத்தில் இனி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் அல்லது நிலம் ஆகிய சொத்துகளை குத்தகை விடாமல் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது குத்தகை காலம் முடிந்துள்ள சொத்துகளை மீட்பதுடன், மீண்டும் புதுப்பித்து கொடுக்காமல் தவிர்க்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது குத்தகையில் இருக்கும் கட்டிடம், நிலத்திற்கு தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ற வகையில் வாடகை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிலைக்குழு உறுப்பினர் கீதா சீனிவாசரெட்டியின் அறிவிப்புக்கு கட்சி பேதம் இல்லாமல், அனைத்து கவுன்சிலர்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து ஒப்புதல் வழங்கினர்.

 

கட்டடங்களுக்கு வரி உயர்வு: கருத்து கேட்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி 07.09.2010

கட்டடங்களுக்கு வரி உயர்வு: கருத்து கேட்க வலியுறுத்தல்

கொடுமுடி, செப். 6: கொடுமுடி பேரூராட்சியில் ஏற்கனவே வரி விதிப்பு செய்யப்பட்டிருக்கும் கட்டடங்களுக்கு, இனி சொத்துவரி செலுத்துவேர் சங்கத்தை கூட்டி கருத்துக் கேட்ட பின்னர் வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொடுமுடி நகர சொத்துவரி செலுத்துவோர் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் தலைவர் கே.முத்துச்சாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயலாளர் ஆ.ராஜசுப்ரமணியன், பொருளாளர் ஜெ.இளங்கோ முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் டி.ரங்கசாமி வரவேற்றார்.

கொடுமுடி பேரூராட்சியில் 1998-ம் ஆண்டு முதல் சொத்தின் மதிப்பில் 5.5 சதவீதம் என்று காலியிட வரி வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பேரூராட்சி முழுவதும் 15 வார்டுகளிலும் உள்ள வரிவிதிப்பு இல்லாத கட்டடங்களுக்கு வரிவிதிப்பு செய்ய வேண்டும்.

சேலத்தில் உள்ள நகர ஊரமைப்புத் துறை அலுவலகத்திற்கு கொடுமுடியில் கடை கட்டுவோர் 1 சதுர மீட்டருக்கு | 125 கட்ட வேண்டும் என்று உள்ள அரசாணையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

அனைத்து வார்டு பகுதிகளிலும் துப்புறவுப் பணிகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு சுகாதாரம் பேணப்பட வேண்டும். கொசு மருந்து அடிக்கப்பட வேண்டும். தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 


Page 65 of 148