வரி வசூலில் சதமடித்தது வீரகேரளம்
Tuesday, 03 August 2010 06:09
administrator
நாளிதழ்௧ள் -
வரி விதிப்பு
தினமலர் 03.08.2010
வரி வசூலில் சதமடித்தது வீரகேரளம்
பேரூர் :வீரகேரளத்தில், 17 ஆண்டுகளுக்கு பின் நூறு சதவீதம் வரி வசூலாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல், வீரகேரளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்வரி, உரிமக்கட்டணம் வசூலிக்கப்பட்டன. தண்ணீர் வரி நீங்கலாக நிலுவையின்றி ஒரு கோடி ரூபாய் வசூலானது. கடந்த 17 ஆண்டுகளுக்கு பின், நூறு சதவீதம் வசூலாகியுள்ளது. இச்சாதனையை பாராட்டி, பேரூராட்சிகளின் இயக்குனர் உத்தரவின் பேரில் கலெக்டர் உமாநாத், பேரூராட்சி தலைவர் பக்தவச்சலம், செயல் அலுவலர் துரைமணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
|
வீட்டு குடிநீர் இணைப்புக்கு அதிக டெபாசிட்
Tuesday, 03 August 2010 06:07
administrator
நாளிதழ்௧ள் -
வரி விதிப்பு
தினமலர் 03.08.2010
வீட்டு குடிநீர் இணைப்புக்கு அதிக டெபாசிட்
திருநெல்வேலி :நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆலங்குளம் டவுன் பஞ்., திமுக, காங்., கூட்டணி கவுன்சிலர்கள் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நெல்லை மாவட்டத்தில் உள்ள 36 டவுன் பஞ்.,களில் கீழப்பாவூர் டவுன் பஞ்.,ல் வீட்டு இணைப்புக்கு 4,110 ரூபாய், சுரண்டை டவுன் பஞ்.,ல் 4,500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.ஆனால் ஆலங்குளம் டவுன் பஞ்., பகுதியில் ஏழை மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மக்கள் விரோத போக்குடன் 8,100 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இக்கட்டணத்தை குறைக்க கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .எனவே, ஆலங்குளம் டவுன் பஞ்., பகுதியில் குடிநீர் இணைப்பு பெற 4,110 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று (3ம் தேதி) முதல் டவுன் பஞ்., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் கவுன்சிலர்கள் ராஜதுரை, தங்கசெல்வம், ராமரத்தினம், மோகன்ராஜ், ஜெயந்தி சின்னதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: டவுன் பஞ்.,
Monday, 02 August 2010 05:51
administrator
நாளிதழ்௧ள் -
வரி விதிப்பு
தினமலர் 02.08.2010
சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: டவுன் பஞ்.,
தர்மபுரி: "பாலக்கோடு டவுன் பஞ்சாயத்தில் சொத்துவரி செலுத்த தவறினால் சட்டப்படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என செயல் அலுவலர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.பாலக்கோடு டவுன் பஞ்சாயத்தில் வசிப்பவர்கள் டவுன் பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதுபோன்ற நடவடிக்கைகளை வரி விதிப்புதாரர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 1920ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நகராட்சி சட்டம் 36வது பிரிவின்படி முதல் அரையாண்டின் சொத்துவரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், 2வது அரையாண்டின் சொத்துவரியை அக்டோபர் 30ம் தேதிக்குள் செலுத்த வேணடும்.
அவ்வாறு செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 2010-2011 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செலுத்தும் காலவரையறை கடந்த ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது.இதன் பின்னரும் பலர் சொத்துவரியை செலுத்தவில்லை. அவ்வாறு வரி செலுத்தாத கட்டிட உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போர், திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கான சொத்துவரியை அக்டோபர் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.சொத்துவரியை செலுத்த தவறுபவர்கள் மீது ஜப்தி நடடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான அறிவிப்பு கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் வீட்டின் உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போருக்கும் பொருந்தும்.
|
|
|
|
Page 73 of 148 |