தினகரன் 15.06.2010
அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு மாநகராட்சி வரி வசூலில் கூடுதல் கவனம் தேவை
பெங்களூர், ஜூன் 15: மாநகராட்சி அதிகாரிகள் வரி வசூலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மேயர் நடராஜ் உத்தரவிட்டார்.
வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேற்று மேயர் நடராஜ் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது துணை மேயர் தயானந்த், மாநகராட்சி கமிஷனர் பரத்லால் மீனா, ஆளும¢கட்சித் தலைவர் கட்டா சத்யநாராயணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
2010&11ம் நடப்பு நிதியாண்டில் வரி வசூல் திருப்திகரமாக இல்லை. வரி வசூல் பின்தங்கியதற்கு காரணம் என்ன என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட மேயர், வரி வசூல் குறைய ஊழியர் பற்றாக்குறை காரணமா? வரி செலுத்தாத உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்புகிறீர்களா? மாநகராட்சியில் எவ்வளவு சொத்து உள்ளது என்பது தெரியுமா? போன்ற பல கேள்விகளை அதிகாரிகளிடம் எழுப்பினார். வரி வசூலிப்பதில் சிக்கல் நிலவுவதற்கான காரணத்தை விளக்கமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கடந்தாண¢டு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாநகராட்சி நடைபெற்றது. ஆனால் தற்போது மக்களாட்சி நடக்கிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது நமது கடமை. இதற்கு பணம் தேவை என்பதால் வரி வசூலிப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. வரி பாக்கிகளை கண்டிப்பாக வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.