தினமலர் 29.03.2010
அரக்கோணம் நகராட்சியில் நிலுவை வரிபாக்கி ரூ. 4 கோடி
அரக்கோணம்:அரக்கோணம் நகராட்சியில் இதுவரை 1.95 கோடி வரி வசூல் செய்யப் பட்டுள்ளது. இன்னும் 4 கோடியே 42 லட்சம் ரூபாய் வரி வசூல் ஆகாமல் உள்ளது. அரக்கோணம் நகராட்சியில் கடந்த 26ம் தேதி சொத்துவரி 1 கோடியே 8 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. வசூலாகாமல் உள்ள பாக்கித் தொகை ரூ.2 கோடியே 28 லட்சம். தொழில்வரியில் ரூ.10 லட்சத்து 37 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதம் 26 லட்சம் பாக்கி உள்ளது.
குடிநீர் கட்டணம் கடந்த 25ம் தேதி வரை ரூ.60 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதம் ரூ.80 லட்சம் பாக்கி உள்ளது. வரியில்லா இனம் (மார்க்கெட் கடைகள் உட்பட) ரூ.17 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் பாக்கியாக ரூ. 1 கோடியே 17 லட்சம் வசூல் ஆகாமல் உள்ளது.மொத்தத்தில் 25ம் தேதி வரை அனைத்து வரிகளும் சேர்த்து நகராட்சிக்கு ரூ.1.95 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதம் பாக்கி 4 கோடியே 52 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்படாமல் உள்ளது.
வசூல் மையங்கள்அரக்கோணம் நகராட்சியில் தினமும் வரி வசூல்கள் நகராட்சி வளாகத்தில் உள்ள கணினி மையத்திலும், பழனிப்பேட்டை துணை வரி வசூல் மையத்திலும் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது.நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டண வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகள் அனைத்தையும் வரும் 31ம் தேதி நகராட்சியில் செலுத்தி ரசீது பெற்றுகொள்ள நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.