Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

தீவிர வரிவசூல் முகாம் மார்ச் 20 வரை நீட்டிப்பு

Print PDF

தினமலர் 18.03.2010

தீவிர வரிவசூல் முகாம் மார்ச் 20 வரை நீட்டிப்பு

திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நடந்து வரும் தீவிர வரிவசூல் முகாம் மார்ச் 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி அனைத்து நிலுவையிலுள்ள வரியினங்கள், 2009-10ம் இரண்டாம் அரையாண்டு வரையினங்கள் ஆகியவற்றை, பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய நான்கு கோட்ட அலுவலகங்களில்உள்ள சேவை மையங்களிலோ ஒல்லது தஞ்சை ரோடு-அரியமங்கலம் வார்டு அலுவலகம். விறகுபேட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம், கே.கே.நகர் வார்டு அலுவலகம், கள்ளத்தெரு வார்டு அலுவலகம், நந்திகோவில் தெரு வார்டு அலுவலகம், உறையூர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், .புதூர் சித்த மருத்துவக் கட்டிடம், தேவர் ஹால் ஆகிய இடங்களில்அனைத்து நாட்களிலும் (சனி, ஞாயிறு உட்பட) காலை 8 முதல் இரவு 8 மணி வரை வரிவசூல் செய்யப்படுகிறது. வரியினங்களை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் 20ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்தி ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகிய நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated on Thursday, 18 March 2010 06:40
 

வரிவசூல் செய்வதற்காக விடுமுறை இன்றி பணி

Print PDF

தினமலர் 18.03.2010

வரிவசூல் செய்வதற்காக விடுமுறை இன்றி பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி ஊழியர்கள் வரிவசூல் நடவடிக்கைக்காக விடுமுறை இன்றி பணியாற்றி வருகின்றனர்.திண்டுக்கல் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி வசூலிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக 40 பேர் கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இக்குழுவினர் காலை முதல் மதியம் வரை வரிவசூல் பணியிலும், மதியத்திற்கு மேல் அலுவலக பணியிலும் ஈடுபடுகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே இவர்கள் வார விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை. விடுமுறை நாட்களிலும் வரிவசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி கமிஷனர் முதல் வரிவசூல் பணியாளர்கள் வரை யாரும் விடுமுறை எடுக்கவில்லை.ஊழியர்களின் முயற்சியால் வரிவசூல் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு நல்ல முறையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 18 March 2010 06:23
 

மாநகராட்சி வரியினங்களை வசூலிக்க வீதி, வீதியாக வரும் மொபைல் வாகனம்

Print PDF

தினமலர் 17.03.2010

மாநகராட்சி வரியினங்களை வசூலிக்க வீதி, வீதியாக வரும் மொபைல் வாகனம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 85 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. இறுதி நாளுக்கு 14 நாட்கள் எஞ்சியுள்ளதால், 100 சதவீத இலக்கை எட்ட, மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இதற்காக, மொபைல் வரி வசூல் வாகனம் மூலம் பல்வேறு பகுதிகளிலும் வரி வசூல் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 80 ஆயிரம் சொத்து வரியினங்கள்; 12 ஆயிரம் தொழில் வரி இனங்கள்; 48 ஆயிரம் குடிநீர் இணைப்பு வரியினங்கள் உள்ளன. மாநகராட்சி அலுவலகம், குமரன் வணிக வளாகம், பாரதியார் வணிக வளாகம், பூச்சக்காடு, ராயபுரம் பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் வரி வசூலிப்பு மையங்கள் செயல்படுகின்றன. இந்த வரி வசூலிப்பு மையங்கள் மூலம், மாநகராட்சிக்குச் சேர வேண்டிய அனைத்து வகை வரியினங்களும் வசூலிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின் மொத்த வரியின வருவாய் இலக்கு 23 கோடி ரூபாய். இதில், தற்போது வரை 85 சதவீத அளவாக 20 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதர வரியினத்தை வசூலிக்க மாபைல் வரி வசூல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது: குடிநீர் பழுது நீக்கும் மொபைல் வாகனம், தற்காலிகமாக மொபைல் வரி வசூல் மையமாக மாற்றப் பட்டுள்ளது.

இதுவரை 85 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் எஞ்சியுள்ளதால், 100 சதவீத இலக்கையும் எட்டி விடுவோம். குடிநீர் பழுது நீக்கும் வாகனத்தை, அதற்கு பணியில்லாத காலங்களில் வரி வசூல் வாகனமாக மாற்றிப் பயன்படுத்தி வருகிறோம். இதனால், குடிநீர் பழுதுபார்த்தல் எவ்வகையிலும் பாதிக்காது. மொபைல் வரி வசூல் மையத்தில் உள்ள கம்ப் யூட்டர்கள் ஆன்-லைன் மூலம் மாநகராட்சி அலுவலகத்துடன் இணைக் கப்பட்டிருக்கும். இதன் மூலம் வரி வசூலை எளிதில் பதிவு செய்ய முடியும். நேற்று புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வரிவசூல் வாகனம் நிறுத்தப் பட்டிருந்தது. இன்று கே.வி.ஆர்., நகர் பகுதியிலும், நாளை முத்தையன் கோவில் பகுதியிலும், மொபைல் வரிவசூல் மையம் மூலம் வரிகள் பெறப்படும்.

வரி செலுத்தியதற்கு உடனடியாக ரசீது கொடுக்கப்படும். தொடர்ச்சியாக, ஒவ்வொரு பகுதிக்கும் வரி வசூல் வாகனம் அனுப்பி வைக்கப்படும். இந்த வாகனத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வரி பெறப்படும். சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணங்களைச் செலுத்தி பயன்பெறலாம், என்றனர்.

Last Updated on Wednesday, 17 March 2010 07:18
 


Page 99 of 148