Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

டவுன் பஞ்., பகுதியில் வரி செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினமலர் 06.03.2010

டவுன் பஞ்., பகுதியில் வரி செலுத்த வேண்டுகோள்

அரூர்: "அரூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் நிலுவையில் உள்ள வரி செலுத்த வேண்டுகோள்' விடுக்கப்பட்டுள்ளது.டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருஞானம் வெளியிட்ட அறிக்கை: அரூர் டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்கள் சொத்து வரி,தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை நிலுவையின்றி வசூலிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எனவே பொது மக்கள் 2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான அனைத்து வரிபாக்கிகளையும் நிலுவையின்றி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அலுவலக பணியாளர்கள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும

Last Updated on Saturday, 06 March 2010 09:47
 

தஞ்சை நகராட்சியில் வரி நிலுவை ரூ. 10 கோடி

Print PDF

தினமணி 04.03.2010

தஞ்சை நகராட்சியில் வரி நிலுவை ரூ. 10 கோடி

தஞ்சாவூர், மார்ச் 3: தஞ்சாவூர் நகராட்சியில் வரி நிலுவை ரூ. 10 கோடியை வசூல் செய்ய அனைத்து பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் நகராட்சி ஆணையர் த. நடராஜன்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் நகராட்சிக்கு வரி பாக்கியாக சொத்து வரியில் ரூ. 4.50 கோடி, குடிநீர் கட்டணத்தில் ரூ. 3.04 கோடி, வரியில்லா இனத்தின் கீழ் ரூ. 1.76 கோடி, தொழில் வரியாக ரூ. 1.06 கோடி நிலுவையில் உள்ளது.

இந்த நிலுவைத் தொகைகளை வசூல் செய்வதற்கு நகராட்சி அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பணியாளர்கள் அனைவரும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கடந்த ஒரு மாதமாக தீவிர வசூலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும், நகராட்சியின் மொத்த கேட்புத் தொகையில் 50 சதத்திற்கும் குறைவாகவே வசூல் செய்யப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டு (மார்ச் 2010) முடிவதற்கு இன்னும் சிலநாள்களே உள்ளதால் அதற்கு முன்னதாக 100 சதம் வசூல் செய்திடும்பொருட்டு வரி வசூலை தீவிரப்படுத்த முனைப்பு காட்டப்பட்டுள்ளது.

வரி செலுத்துபவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு அனைத்து வரி வசூல் மையங்களும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் அலுவலகம் மற்றும் கணினி வசூல் மையங்களில் வரி வசூல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு நகராட்சிக்கு சேரவேண்டிய வரியினங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நகராட்சி நிதிநிலை திருப்திகரமாக இல்லாததால், பொதுமக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றிடும் நோக்கில் வரி வசூல் பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை வைப்புத் தொகை, வாடகை, உரிமக் கட்டணங்கள் ஆகியவற்றை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும். வரி வசூல் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பொறியாளர் காமராஜ், நகரமைப்பு அலுவலர் கோவிந்தசாமி, நகர்நல அலுவலர் அர்ஜுன்குமார், மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் (பொ) சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 04 March 2010 09:49
 

நகராட்சி வரிவசூல் பணியை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

Print PDF

தினமலர் 04.032010

நகராட்சி வரிவசூல் பணியை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சையில் அனைத்து வரி வசூல் மையங்களும் காலை 9 முதல் மாலை 5 வரை விடுமுறை இல்லாமல் செயல்படும். அதிகாரிகளும் விடுமுறை தினம் பார்க்காமல் வரிவசூல் பணியை துரிதபடுத்த வேண்டும் என்று ஆணையர் அறிவுறுத்தினார். தஞ்சை நகர பகுதியில் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அலுவலர்கள் கலந் தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது ஆணையர் நடராஜன் பேசியதாவது: தஞ்சை நகராட்சிக்கு சொத்துவரி நிலுவை ரூ.4 கோடியே 50 லட்சம், குடிநீர் வரி நிலுவை ரூ.3 கோடியே 4 லட்சம், தொழில் வரி ரூ.1 கோடியே 6 லட்சம், வரியில்லாத இனத்தின் கீழ் ரூ.1 கோடியே 76 லட்சம் உள்ளது. இதுவரை 50 சதவீதத்திற்கு குறைவான தொகையே வசூல் செய்யப்பட்டுள்ளது. வரும் 31ம்தேதி முடிவதற்குள் 100 சதம் வசூல் செய்ய வேண்டும். நகராட்சியின் நிதிநிலை திருப்திகரமாக இல்லை. இதனால் மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அனைத்து வரி வசூல் மையங்களும் காலை 9 முதல் மாலை 5 வரை விடுமுறை இல்லாமல் செயல் படும். வரி வசூல் செய்யும் அதிகாரிகளும் விடுமுறை தினங்கள் என்று பார்க்காமல் வரி வசூல் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்.

இவ்வாறு ஆணையர் கூறினார். பொறியாளர் காமராஜ், நகரமைப்பு அலுவலர் கோவிந்தசாமி, நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார், மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 04 March 2010 06:38
 


Page 104 of 148