Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமலர் 03.03.2010

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி செலுத்தாதவர்களின் குழாய் இணைப்புகள் துண்டிக்கப் படும் என நிர்வாக அதிகாரி பாபுஜி தெரிவித்துள்ளார். தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 500 மேற்பட்ட வீட்டுக்குழாய் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வரியாக மாதம் 50 ரூபாய் செலுத்தவேண் டும். பல மாதங்களாக பலர் வரி செலுத்தாமல் உள்ளனர். இது தவிர சொத்துவரி, தொழில்வரி ஆகிய வகையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வரி பாக்கி உள்ளது. இதனால் பேரூராட்சி பகுதியில் மராமத்துப்பணிகள் செய்வதிலும், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரி பாபுஜி கூறுகையில், மார்ச் 10 க்குள் வரி செலுத்தாதவர்களின் குழாய் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Wednesday, 03 March 2010 06:50
 

சொத்து வரி வசூலிக்க கையடக்க கருவி சென்னை மாநகராட்சியில் அறிமுகம்

Print PDF

தினமலர் 03.03.2010

சொத்து வரி வசூலிக்க கையடக்க கருவி சென்னை மாநகராட்சியில் அறிமுகம்

சென்னை :""சென்னை நகரில் கூடுதல் கட்டுமான கட்டடங்களை கண்டறிந்து சொத்து வரி வசூலிக்க வேண்டும்.நிர்ணயித்த இலக்கைத் தாண்டி சொத்து வரி வசூலிக்கும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் பேசினார்.சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்போர், கையில் கொண்டு செல்ல வசதியாக, கையடக்க வரி வசூல் கருவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று, மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. வரி வசூலிப்போர் 300 பேருக்கு, கையடக்க வரி வசூல் கருவிகளை மேயர் சுப்ரமணியன் வழங்கி பேசியதாவது:

சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிக்க பல எளிமையான முறைகளை அமல் படுத்தி வருகிறது.வீடு வீடாகச் சென்று சொத்து வரி வசூலித்தல், ஆன்-லைன் மூலம் வரி வசூலித்தல், மண்டல அலுவலக பிரத்யேக கவுன்டர்கள் மூலம் வரி வசூல், தலைமை அலுவலகத்தில் வசூல் செய்தல், பிளாக்பெரி கருவி மூலம் வசூல் செய்தல் போன்ற பல்வேறு வகைகளில் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது.மேலும், எளிமையாக வசூல் செய்யவும், மாநகராட்சி கணக்கில் வரவு வைத்த விவரத்தை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்ட, கையடக்க வரி வசூல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவியில் சம்பந்தப் பட்ட சொத்து உரிமையாளரின், பின் நம்பரை பதிவு செய்தால், அந்த பின் நம்பருக்குரிய சொத்து வரி விவரம் தெரிய வரும்.அதை வைத்து பாக்கி இருக்கும் சொத்து வரியை செலுத்தலாம். அதற்குரிய ரசீது அந்த கருவி மூலம் உடனே பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 300 சொத்து வரி வசூலிப் பாளர்களுக்கு இக்கருவி வழங் கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 94 லட்சம் ரூபாய். இந்த கருவியில் கிரெடிட் கார்டு மூலமும் சொத்து வரி கட்டலாம். அத்துடன் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட வரி வசூலிக்கும் முறையை அமல்படுத்த தொலைபேசி மூலம் ஒருங் கிணைந்து, "ஐவிஆர்எஸ்' சேவைத் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2006-07 ஆண்டு மாநகராட்சி சொத்து வரி வசூல் 231.94 கோடி ரூபாயாக இருந்தது. 2007-08ம் ஆண்டு சொத்து வரி உயர்வு ஏதும் இல்லாமல் 291.26 கோடி ரூபாய் வசூலானது. 2008-09ம் ஆண்டில் 300 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வசூலிக்க இலக்க நிர்ணயிக் கப்பட்டு, 323.80 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது.இந்த ஆண்டு 350 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 301 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள் ளது.இதற்கு களப்பணியாளர் களாக செயல்படும் வரி வசூலிப்போரே முக்கிய காரணம்.சொத்து வரி வசூலிப்போர், நகரில் கட்டப்படும் கூடுதல் கட்டுமானப் பணிகளை கவனிப்பதில்லை.நகரில் புதிய கட்டடங்கள் உருவாக வாய்ப் பில்லாத நிலையில், இருக்கும் கட்டடங்களில் கூடுதல் கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது.

மாநகராட்சியில் அந்தந்த வார்டு ஜூனியர் இன்ஜினியர்கள், உதவி இன்ஜினியர்கள் வருவாய்த்துறையுடன் ஒருங் கிணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி செய்தால், மேலும் கூடுதல் சொத்து வரி வசூல் செய்ய வாய்ப்பு ஏற்படும். அதோடு வணிக ரீதியாக செயல்படும் கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக சொத்து வரி வசூல் செய்யும் ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள் ளது.இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.கமிஷனர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.சொத்து வரி வசூலிப் பாளர்களுக்கு கையடக்க கருவியை பயன் படுத்தும் முறை குறித்து பயிற்சியும் அளிக்கப் பட்டது.

Last Updated on Wednesday, 03 March 2010 06:30
 

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்க 300 நவீன கருவிகள்; மேயர் அறிமுகப்படுத்தினார்

Print PDF
மாலை மலர் 02.03.2010

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்க 300 நவீன கருவிகள்; மேயர் அறிமுகப்படுத்தினார்

சென்னை மாநகராட்சியில்      சொத்து வரி வசூலிக்க      300 நவீன கருவிகள்;      மேயர் அறிமுகப்படுத்தினார்

சென்னை, மார்ச். 2-

சென்னை மாநகராட்சியில் மா.சுப்பிரமணியன் சொத்துவரி வசூலிப்பதற்காக நவீன கருவிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசியதாவது:-

சென்னை மாநகராட்சியில் 2006ம் ஆண்டு புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, சொத்து வரியை உயர்த்தாமல் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. 2008-2009ம் ஆண்டு ரூ.300 கோடி வசூல் செய்ய திட்டமிட்டு, ரூ.323.80 கோடி வசூல் செய்யப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.350 கோடி இலக்கில் இதுவரை ரூ.301 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை காட்டிலும் தாண்டி செல்லக்கூடிய நிலை உள்ளது.

சென்னை மாநகராட்சியில் இன்று இந்தியாவிலேயே முதல்முறையாக சொத்து வரியை நவீன முறையில் வசூலிப்பதற்காக இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் ஒன்று அனைத்து வரிவசூலிப்பவர்களுக்கும் கையடக்க வரி வசூல் கருவி இது 300 பேருக்கு ரூபாய் 94 லட்சம் செலவில் இன்று வழங்கப்படுகிறது. இதன் மூலமாக சொத்துவரி வசூலிப்பதால் எந்த எந்த அரையாண்டு காலத்திற்கான சொத்துவரி வசூல் செய்யப்படுகிறது என்கிற விவரம் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சொத்து வரி செலுத்துவோர்க்கு அப்பொழுதே ரசீதும் வழங்கப்படுகிறது.

மற்றொரு திட்டமாக சொத்துவரி வசூலிக்கும் முறையை ஒழுங்குபடுத்தவும், தரவுதளத்துடன் தடையில்லா இணைப்புடன் கூடிய வரி வசூலிக்கும் முறையை அமுல்படுத்த தொலைபேசி மூலம் ஒருங்கிணைந்த சேவைக்கான வசதி ஐ.வி.ஆர்.எஸ். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி களப்பணியினை மேற்கொள்ளும் உதவி வருவாய் அலுவலருக்கு அலுவலக வாகன வசதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் பொருட்டு அனைத்து உதவி வருவாய் அலுவலருக்கும் கைப்பேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூபாய் 85 கோடி தொழில்வரியாக வசூலிக்கப்பட்டது போல், தற்பொழுது 101 கோடி ரூபாய்க்கு அதிகமாக தொழில் வரி வசூல் செய்யப்பட்டு, சாதனை புரியப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மேலும் 50 கோடி ரூபாய் தொழில்வரி வசூல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி ஆளுங்கட்சித்தலைவர் ராமலிங்கம், எதிர்க் கட்சித்தலைவர் சைதை ரவி, நிலைக்குழுத்தலைவர் ராதா சம்பந்தம், வருவாய் அதிகாரி ராமநாதன், கூடுதல் வருவாய் அதிகாரி கோபால ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 March 2010 11:38
 


Page 106 of 148