Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்தாத வீடுகளில் ஜப்தி : கம்பம் நகராட்சியினர் அதிரடி

Print PDF

தினமலர் 20.02.2010

வரி செலுத்தாத வீடுகளில் ஜப்தி : கம்பம் நகராட்சியினர் அதிரடி

கம்பம் : குடிநீர் கட்டணம், சொத்துவரி, வீட்டு வரி, தொழில்வரி உள்ளிட்ட பலவகை வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்தாதவர்களின் வீடுகளில் ஜப்தி நடவடிக்கை எடுக்க கம்பம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நகராட்சிகளில் பொதுச்சுகாதாரம், குடிநீர், தெருவிளக்குகள் பராமரிப்பு போன்ற பணிகளுக்கும், நகரில் மேற் கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கும், பணியாளர்களின் சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்கும், வரி வருவாயை நம்பியே, அந்நிர்வாகங்கள் உள்ளன. குடிநீருக்கு குடிநீர்வாரியத்திற்கும், மின்சாரத்திற்கும் மின்வாரியத்திற்கும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் நகராட்சியினர் கட்டணம் செலுத்தி வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரியத்திடமிருந்து குடிநீர் அதிக விலைக்கு வாங்கி, குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சப்ளை செய்கிறது.

இந்நிலையில் குடிநீர், சொத்து, தொழில், வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை செலுத்துவதில் பெரும்பாலானோர் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கம்பம் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் வரிவசூலை தீவிரப்படுத்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கம்பம் நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"" இதுவரை குடிநீர் கட்டணம் , சொத்துவரி, வீட்டு வரி மற்றும் தொழில்வரி கட்டாமல் நிலுவை வைத்திருப்பவர்கள், உடனடியாக நிலுவைத் தொகையை நகராட்சியில் செலுத்த வேண் டும். தவறும் பட் சத்தில், வரி நிலுவை வைத்திருப்பவர்களின் வீடுகளில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அந்த வீடுகளுக்கு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படமாட்டாது. தேவையற்ற நடவடிக்கையை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Saturday, 20 February 2010 06:44
 

மாநகராட்சி வரி விதிப்பு குழு கூட்டம்

Print PDF

தினமலர் 20.02.2010

மாநகராட்சி வரி விதிப்பு குழு கூட்டம்

மதுரை : மதுரை மாநகராட்சியின் வரி விதிப்பு நிதிக்குழு கூட்டம், அதன் தலைவர் மகேஸ்வரி தலைமையில், தலைமை பொறியாளர் சக்திவேல் முன்னிலையில் நடந்தது. 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. வருகிற ஆண்டில் சென்ற ஆண்டை விட, வருவாயை அதிகரிப்பது தொடர்பாகவும், குடிநீர், சாலை வசதி, கொசு ஒழிப்பு போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது தொடர்பாகவும் பேசப்பட்டது. உதவி கமிஷனர்கள் ஆர்.பாஸ்கரன், தேவதாஸ், ரவீந்திரன், ராஜகாந்தி, அங்கயற்கண்ணி, சிவன், கவுன்சிலர்கள் நல்லகாமன், எம்.கணேசன், அழகர்சாமி, கலைமதி, சுஜாதா கலந்துகொண்டனர்.

Last Updated on Saturday, 20 February 2010 06:36
 

மாநகராட்சி கடைகளின் வரி பாக்கி ரூ.10 கோடி

Print PDF

தினமணி 19.02.2010

மாநகராட்சி கடைகளின் வரி பாக்கி ரூ.10 கோடி

மதுரை, பிப். 18: மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமானக் கடைகளிலிருந்து மட்டும் இன்னும் வசூலிக்கப்பட வேண்டிய வரி பாக்கி ரூ. 10 கோடி வரை உள்ளது.

இதில், அதிகப்படியாக பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளிலிருந்து ரூ. 1.50 கோடி வரை வரி பாக்கி வசூலிக்கப்பட வேண்டியுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பேக்கரி, டீ கடை, மருந்துக் கடை, ஸ்டேஷனரி, பலசரக்கு உள்ளிட்ட பல்வேறு கடைகள் ரூ. 20 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளன.

இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், ரூ. 10 கோடி வரை வரி பாக்கி வசூலிக்கப்பட்டது. இது தவிர, சொத்துவரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை இணைப்புக்கான கட்டணம் உள்ளிட்ட வகையில், பல கோடி ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடைகளுக்கான வரி நிலுவையில், அதிகப்படியாக பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள 200}க்கும் மேற்பட்ட கடைகள் வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இக்கடைகள் சார்பில் மட்டும் ரூ. 1.50 கோடி வரை வரி செலுத்தப்படாமல் உள்ளது.

15 கடைகளுக்கு பூட்டு: இந்நிலையில், மதுரை கீழமாரட் வீதி, அண்ணா பஸ் நிலையப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்துக் கடை, வாழைக்காய் கடை, முட்டைக் கடை, பேக்கரி, கருவாட்டுக் கடை ஆகிய 15 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த 15 கடைகளிலிருந்து மட்டும் ரூ. 12 லட்சம் வரி பாக்கி செலுத்த வேண்டியிருப்பது தெரியவந்தது.

பொருள்களுடன் கடைக்கு பூட்டு: எனவே, கடைக்குள் பொருள்கள் இருந்த நிலையில் உரிமையாளர்களை மட்டும் வெளியேற்றிவிட்டு, மேற்கண்ட 15 கடைகளையும் பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து, மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்) ரா. பாஸ்கரன் கூறுகையில், நிலுவையில் உள்ள வரிகளை கடை உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்தி, கடைகளை பூட்டும் நடவடிக்கையைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். மேலும், இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றார்.

Last Updated on Friday, 19 February 2010 10:51
 


Page 110 of 148