Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நிலுவை வரித்தொகை செலுத்த குளித்தலை நகராட்சி அறிவிப்பு

Print PDF
தினமலர் 17.02.2010

நிலுவை வரித்தொகை செலுத்த குளித்தலை நகராட்சி அறிவிப்பு

குளித்தலை: "குளித்தலை நகராட்சியில் நிலுவையில் உள்ள வரி பணத்தை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும்' என நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். குளித்தலை நகராட்சி கமிஷனர் தனலட்சுமி கூறியதாவது: நகராட்சி பகுதி பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2009-10ம் ஆண்டுக்கான சொத்து, குடிநீர், தொழில், நகராட்சி கடைகளின் வாடகை ஆகியவை நிலுவையின்றி உடனடியாக செலுத்த வேண்டும். தவறும்பட்சம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி தலைவர் அமுதவேல் கூறுகையில்,""நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தினால், நகராட்சி திட்ட வளர்ச்சி பணிகளை துரிதமாக செயல்படுத்த முடியும். ஆகவே மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:23
 

போடி நகராட்சியில் 100 சதவீத சொத்து வரி வசூல்

Print PDF

தினமணி 16.02.2010

போடி நகராட்சியில் 100 சதவீத சொத்து வரி வசூல்

போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகை மூலம் நகராட்சிக்கு வருமானம் வருகிறது. இந்த வருமானத்தால் நகராட்சி துப்புரவு பணிகள் மற்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தற்போது போடி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, நகரை சுத்தமாக வைத்து உள்ளனர். பொது மக்களின் குறைகள் உடனடி யாக தீர்வு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்து வரியை ஆர்வமாக நகராட்சியில் செலுத்தி வருகிறார்கள். நகராட்சியில் வரி வசூல் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே 100 சதவீத சொத்து வரி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது என்று நகராட்சி தலைவர் ரதியாபானு, துணைத்தலைவர் சங்கர், நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 12:03
 

சொத்துவரியை செலுத்தாவிட்டால் ஜப்தி

Print PDF

தினமணி 16.02.2010

சொத்துவரியை செலுத்தாவிட்டால் ஜப்தி

திருவண்ணாமலை, பிப். 15: நகராட்சிகளில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் மார்ச் மாதத்துக்குள் செலுத்தாவிட்டால் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சிகளின் சொத்துவரி நிலுவை குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது:

நகராட்சிகளில் சொத்துவரி வசூல் திருப்திகரமாக இல்லை. 40 முதல் 50 சதவீதம் வரைதான் வசூலாகி உள்ளது. பிப்ரவரி மாதத்துக்குள் 80 சதவீதமும், மார்ச் மாதத்துக்குள் 90 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும். சொத்துவரி நிலுவை வைத்துள்ளோரின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நகராட்சி ஆணையர்கள் சேகர் (திருவண்ணாமலை), சசிகலா (வந்தவாசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 05:55
 


Page 113 of 148