Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

விளம்பர பலகை அமைக்க அரியலூரில் கட்டணம்

Print PDF

தினமலர் 02.02.2010

விளம்பர பலகை அமைக்க அரியலூரில் கட்டணம்

அரியலூர்,: அரியலூரில் விளம்பர பலகை அமைப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.அரியலூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவி விஜயலட்சுமி தலைமை யில் நடந்தது. செயல் அலுவலர் சமயசந்திரன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஏழைகள் நலனுக்காக 21 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக கட்டி கொடுக்க முன்னோடி திட்டம் அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி பகுதியில் விளம்பர பதாகைகள், பலகைகள், தட்டிகள் தற்காலிகமாக நிறுவுவதற்கும், நிரந்தரமாக நிறுவி விளம்பரம் செய்வதற்கும், சதுரமீட்டரில் விளம்பர வரி வசூல் செய்வது, நகராட்சி பகுதியில் நலிவடைந்த பிரிவினர் சராசரி மாத வருமானம் ரூ.3 ஆயிரத்து 300 மற்றும் குறைந்த வருமானம் உடைய பிரிவினருக்கு (சராசரி மாத வருமானம் ரூ.3 ஆயிரத்து 301 முதல் 7 ஆயிரத்து 300 வரை) நீண்ட கால வீட்டு கடன் பெற்று வீடு கட்டி கொள்வதற்கும், அதற்கான ஆண்டு வட்டியில் 5 சதவீதத்தை மானியமாக வழங்குவது குறித்து ஐஎஸ்எச்யுபி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அரசாணையின்படியும் மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படியும் பயனாளிகளை தேர்வு செய்வது ,அரியலூர் நகராட்சிக்கு எஸ்ஐஎஸ்ஆர்ஒய் திட்டத்தின் கீழ் 2008-09ம் ஆண்டிற்கு சமுதாய கட்டமைப்பு தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.51 ஆயிரம் மற்றும் 09-10ம் ஆண்டிற்கு சமுதாய கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட ரூ.40 ஆயிரத்து 937 மற்றும் ஓ அண்ட் ஓசி கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.22 ஆயிரத்து 248க்கு ஸ்டில் டிரெயினிங் பிரோக்கிராம் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, குணா, சந்திரசேகர், மணிவண்ணன், பாபு, சிவஞானம், ராஜா, பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:06
 

ஓட்டல்களுக்கு சேவை கட்டணம் : கம்பம் நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 01.02.2010

ஓட்டல்களுக்கு சேவை கட்டணம் : கம்பம் நகராட்சி நடவடிக்கை

கம்பம் : கம்பத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்க நகராட்சி முடிவு செய் துள்ளது. கம்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருமண மண் டபங்கள், நூற்றுக்கணக் கான ஓட்டல்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் சாப்பிட்ட இலைகள், காய்கறி கழிவுகள், மட்டன் மற்றும் கோழி கழிவுகள், இதர உணவு பண்டங்கள் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை நகராட்சியின் சுகாதார பிரிவினர், அப்புறப்படுத்தி பராமரிப்பு செய்து வருகிறது. தனியார் இந்த கழிவுகளை அப்புறப்படுத்த தனியாக துப்புரவு பணியாளர்கள், வாகனங்கள் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும். ஆனால் நகராட்சியினர் இதுவரை இலவசமாக செய்து வந்தனர்.

இனிமேல், இந்த பணிக்கு சேவை கட்டணம் வசூலிக்க நகராட்சியினர் முடிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் திருமண மண்டங்களுக்கு (சிறியது பெரியது) ரூ. 3 ஆயிரம் என்றும், ஓட்டல்கள் பெரியவற்றிற்கு ரூ. 4 ஆயிரம் , சிறிய ஓட்டல்களுக்கு ரூ. 2 ஆயிரம் சேவை கட்டணமாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. கவுன்சிலில் ஒப்புதல் பெற்று இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Monday, 01 February 2010 06:36
 

காலிமனைகளுக்கு வரி: இனாம்கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமணி 29.01.2010

காலிமனைகளுக்கு வரி: இனாம்கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

கரூர், ஜன. 28: காலிமனைகளுக்கு வரி விதிக்கும் தீர்மானம் இனாம்கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இனாம்கரூர் நகராட்சியின் சாதாரணக்கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் வெ. கவிதா தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் ல. தங்கவேல், செயல் அலுவலர் வி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திருத்தத்தின் படி காலிமனை மீதான சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குடியிருப்புப் பகுதிகள் உள்ள தெருக்களிலுள்ள காலிமனைகள் "' மண்டலமாகவும், முக்கிய சாலைகள் மற்றும் பிரதான சாலைகளுக்கு இட்டுச்செல்லும் பேருந்து வழித்தட சாலைகள் அல்லாதவை "பி' மண்டலமாகவும், முக்கியச் சாலைகள் மற்றும் பிரதான சாலைகளுக்கு இட்டுச்செல்லும் பேருந்து வழித்தட சாலைகள் "சி' மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இவைகளுக்கு ஒரு சதுர அடிக்கு அரையாண்டுக்கு காலிமனை சொத்துவரியாக ஏ மண்டலத்துக்கு 10 பைசா, பி மண்டலத்துக்கு 15 பைசா, சி மண்டலத்துக்கு 20 பைசா வரி விதிக்கப்பட்டது.

மேலும், இனாம்கரூர் நகராட்சிக்கு உள்பட்ட 21 வார்டுகளிலும் பசுமை இயக்கத்தினர் மரக்கன்று நடுவதற்கு அனுமதி அளிப்பது.

நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்துவது, மக்களவை உறுப்பினர் தொகுதி உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சத்தில் 7 வார்டுகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துவது.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.10 லட்சத்தில் பெரியகுளத்துப்பாளையத்தில் ஆழ்குழாய் கிணறுக்கு மின்மோட்டார் பொருத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெங்கமேடு குடிநீர் தேக்கத் தொட்டி அருகே ரூ.1.25 லட்சத்தில் தங்கும் அறை கட்டுவது, நகராட்சி அலுவலக கட்டடத்தில் ஆர்.சி.சி. கட்டடம் அமைப்பதற்கு ரூ.9 லட்சம் அனுமதிப்பது, நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை திட்டப்பணியில் நகராட்சியின் பங்குத் தொகையான ரூ.17.75 லட்சத்தில் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்வதற்கும் அனுமதி அளிப்பது உள்ளிட்ட 48 பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், உறுப்பினர்கள் ரா. கோபாலகிருஷ்ணன், க. ரவி, கு. ரேவதி, சே.ஜமுனா, ப. சகுந்தலா, செ. காமராஜ், கு. சம்பூர்ணம், த. காளியம்மாள், வி. கிரிவாசகன், பொ. சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 122 of 148