Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நிலுவை வரிகள்: வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

Print PDF

தினமணி 22.01.2010

நிலுவை வரிகள்: வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

மதுரை, ஜன. 21: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட கடைகளின் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பது தொடர்பாக, கடை வியாபாரிகள், சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

மாநகராட்சிக்கு உள்பட்ட கட்டடங்களில் வாடகை அடிப்படையில் உள்ள மீன் மார்க்கெட் கடைகள், இரும்புக் கடை, நகைப் பட்டறைகள், மரக்கடைகள், பஜார் கடைகள் உள்ளிட்டவற்றின் நிலுவைத் தொகை செலுத்துவது தொடர்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாநகராட்சி உதவிக் கமிஷனர் (வருவாய்) ரா. பாஸ்கரன் தலைமை வகித்தார்.

இதில், எழுத்தாணிக்காரத் தெரு, திலகர் திடல், சுப்பிரமணியபுரம், ராம்நகர், ஆர்.எம்.எஸ். சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடை வைத்திருப்போர் மற்றும் அவை சார்ந்த சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் 930 கடைகளைச் சேர்ந்தோர், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ. 40 லட்சம் வரியை, வரும் 31.1.2010}க்குள் செலுத்துவதாக உறுதியளித்தனர்.

Last Updated on Friday, 22 January 2010 10:56
 

மாநகராட்சி வரி பாக்கி ரூ.40 லட்சம் செலுத்த முடிவு

Print PDF

தினமலர் 22.01.2010

மாநகராட்சி வரி பாக்கி ரூ.40 லட்சம் செலுத்த முடிவு

மதுரை : மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில், வாடகையில் இயங்கும் மீன் மார்க்கெட், இரும்பு, மரம் மற்றும் பஜார் கடைகள், நகைப்பட்டறை வரி பாக்கியை செலுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாநகராட்சி உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

எழுத்தாணிக்காரத் தெரு, ஆர்.எம்.எஸ்.,ரோடு பாண்டி பஜார், திலகர் திடல், லாரி ஸ்டாண்ட் கடைகள், சுப்பிரமணியபுரம், ராம்நகர் மார்க்கெட்டுகள் உள்பட 930 கடைகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநகராட்சிக்கு 40 லட்சம் ரூபாய் வரி பாக்கியை, ஜன.,31 க்குள் செலுத்த உறுதியளித்தனர். சந்தை கண்காணிப்பாளர் ரங்கராஜன், வரித்தண்டலர்கள் ஆறுமுகம், மாணிக்கம், எடி பங்கேற்றனர்.

Last Updated on Friday, 22 January 2010 07:43
 

ரூ.1 'பார்க்கிங்' கட்டணம் 40 சாலைகளில் வசூலிப்பு : மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 20.01.2010

ரூ.1 'பார்க்கிங்' கட்டணம் 40 சாலைகளில் வசூலிப்பு : மாநகராட்சி முடிவு

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்டுகள், சில வீதிகளில் மட்டும் "பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான சாலைகளில் கட்டணம் இல்லை. இதனால் இந்த வாகனங்களுக்கு பாதுகாப்பும் கிடையாது. இந்நிலையில் நிதியை பெருக்கும் நடவடிக்கையாக சில சாலைகளில் "பார்க்கிங்' கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து 40 சாலைகளை மாநகராட்சி கண்டறிந் துள்ளது. இச்சாலைகளில் ஒரு ரூபாய் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கட்டணத்தை வசூலிக்கும் உரிமத்தை ஏலம் விடுவதன் மூலம், மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும், என மாநகராட்சி எதிர்பார்க்கிறது.

Last Updated on Wednesday, 20 January 2010 10:49
 


Page 124 of 148