Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரிசெலுத்தாத கட்டங்களில் நடவடிக்கை : மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர் 24.12.2009

வரிசெலுத்தாத கட்டங்களில் நடவடிக்கை : மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை: ""மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்தாத, கட்டடங்களில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்துள்ளார். வரி வசூல் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

வரி வசூல் செய்யாமல் மெத்தனமாக இருக்கும் உதவி கமிஷனர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வரித் தண்டலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வாடகை அடிப்படையில் விடப்பட்டுள்ள, கடை உரிமைதார்கள், ஏலதாரர்கள் உரிமத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில், உரிமத்தை ரத்து செய்து, கடையை பூட்டி மாநகராட்சி பொறுப்பில் எடுப்பதுடன், வரும் காலங்களில் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, அவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். இழப்பீட்டுத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை செலுத்தாமல், உள்ள கட்டங்களுக்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் , என்றார். கூட்டத்தில், துணை கமிஷனர் சிவராசு, உதவி கமிஷனர்கள் பாஸ்கரன், தேவதாஸ், ரவீந்திரன், ராஜகாந்தி, அங்கையற்கண்ணி, உதவி நகரமைப்பு அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் பங்கேற்றனர

Last Updated on Thursday, 24 December 2009 09:53
 

பொன்னேரி பேரூராட்சியில் வரி பாக்கி செலுத்த காலக்கெடு

Print PDF

தினமலர் 16.12.2009

 

நீதிமன்ற வழக்குகளால் நிலுவையில் உள்ள ரூ.28 கோடி வரியை வசூலிக்க "சமரசக் குழு' அமைப்பு

Print PDF

தினமணி 14.12.2009

நீதிமன்ற வழக்குகளால் நிலுவையில் உள்ள ரூ.28 கோடி வரியை வசூலிக்க "சமரசக் குழு' அமைப்பு

மதுரை,டிச. 13: நீதிமன்ற வழக்குகளால் நிலுவையில் உள்ள ரூ.28 கோடி வரியை வசூல் செய்ய மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் "சமரசக் குழுஅமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சொத்துவரி சம்பந்தமாக பல்வேறு காரணங்களுக்காக வடக்கு மண்டலத்தில் 41 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 21}ம், மேற்கு மண்டலத்தில் 22}ம், தெற்கு மண்டலத்தில் 178 வழக்குகள் என மொத்தம் 312 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை வரித் தொகை வசூல் செய்ய முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.

இதன் காரணமாக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளவர்களை அழைத்துப் பேசி சமூகத் தீர்வு ஏற்படும் வகையில் "சமரசக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் உதவி கமிஷனர் (வருவாய்), மண்டல உதவி கமிஷனர்கள், சட்ட அலுவலர்கள், முதன்மை நகரமைப்பு அலுவலர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு மண்டலமாக, வழக்குத் தொடர்ந்தவர்களை அழைத்துப் பேசி, சட்டத்துக்கு உள்பட்டு சமரசத் தீர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 


Page 128 of 148