Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

பேரூராட்சி சொத்து வரியை செலுத்த அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 21.11.2009

பேரூராட்சி சொத்து வரியை செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூர், நவ. 20: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

பொதுமக்கள் சொத்துவரி செலுத்துவதில் தாமதம் செய்வதால் சில அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செம்மையாக நிறைவேற்ற வேண்டும்.

சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் விரைந்து செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் வெள்ள சேதங்கள் ஏற்படாதவாறு அதிகாரிகள் கண்காணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் சண்முகம்.

பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மனோகரன் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

அனைத்து வார்டுகளிலும் புதிய வரிவிதிப்புக்கான சிறப்பு முகாம்

Print PDF

தினமணி 19.11.2009

அனைத்து வார்டுகளிலும் புதிய வரிவிதிப்புக்கான சிறப்பு முகாம்

மதுரை, நவ. 18: அனைத்து வார்டுகளிலும் புதிய வரி விதிப்புக்கான சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 60-வது வார்டு புதிய விரிவிதிப்புக்கான சிறப்பு முகாமை, சம்மட்டிபுரம் வரிவசூல் மையத்தில் ஆணையர் எஸ். செபாஸ்டின் முன்னிலையில், மேயர் கோ. தேன்மொழி புதன்கிழமை துவக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் தெரிவித்தாவது:

அனைத்து மண்டலங்களிலும் புதிய வரிவிதிப்புக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. புதிய கட்டடங்களுக்கான வரிவிதிப்பு, சொத்துவரி பெயர் மாற்றம், பொட்டல் வரி விதிப்பு என அனைத்துவிதமான வரிவிதிப்புகளையும் ஒரே நாளில் செய்வதற்காக, இந்த முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமில், 38 நபர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றம், 12 நபர்களுக்கு புதிய கட்டடத்துக்கான சொத்துவரி, 6 நபர்களுக்கு பொட்டல் வரி விதிப்பும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 1.61 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு முகாம் மூலம் காலதாமதம் ஏற்படாமல் உடனடியாக வரிவிதிப்பு செய்யப்படுவதால், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே, இச்சிறப்பு முகாம் இனி தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் நடத்தப்படும் என்றார் ஆணையர்.

நிகழ்ச்சியில், மேற்கு மண்டலத் தலைவர் என். நாகராஜன், கவுன்சிலர் ராஜபாண்டி, உதவி ஆணையர் (மேற்கு) ஆர்.ஜே. ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 19 November 2009 07:49
 

புதிய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி: ஒரே நாளில் ரூ.3 லட்சம் வசூல்

Print PDF

தினமணி 14.11.2009

புதிய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி: ஒரே நாளில் ரூ.3 லட்சம் வசூல்

திருநெல்வேலி, நவ. 13: திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கியாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.3 லட்சம் வசூலானது.

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வேய்ந்தான்குளத்தில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இப் பஸ் நிலையத்தில் மாத வாடகை அடிப்படையில் கடைகள் செயல்படுகின்றன.

இதில் பல கடைகள் வாடகை பணத்தை முறையாக செலுத்தாமல் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.

இந் நிலையில் அந்தக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி, மாநகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளைப் பூட்டுவதற்கு வெள்ளிக்கிழமை காலை அங்கு சென்றனர்.

இதையறிந்த அந்தக் கடை உரிமையாளர்கள், உடனடியாக வாடகை பாக்கியைச் செலுத்தினர். இவ்வாறு மொத்தம் ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வெள்ளிக்கிழமை மட்டும் வசூலானது. அனைத்து கடைகளும் வாடகை பாக்கியைச் செலுத்தியதால், மாநகராட்சி ஊழியர்கள் கடையைப் பூட்டும் நிலைமை ஏற்படவில்லை.

Last Updated on Saturday, 14 November 2009 06:41
 


Page 130 of 148