Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

குப்பைத் தொட்டி வைத்து நூதன வரி வசூல்

Print PDF
தினமணி          24.03.2013

குப்பைத் தொட்டி வைத்து நூதன வரி வசூல்


வரி செலுத்தாவர்கள் வசிக்கும் வீடு, கடை, வணிக வளாகம் ஆகியவற்றின் முன்பகுதியில் குப்பைத் தொட்டியை வைத்து பண்ருட்டி நகர நிர்வாகம் நூதன முறையில் வரி வசூல் செய்து வருகிறது.

பண்ருட்டி நகராட்சிக்கு வீடு, சொத்து, தொழில் மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகள் மூலம் ரூ.4.50 கோடி வரி பாக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் பல ஆண்டுகளாக வரி செலுத்தாத பெரும் பணக்காரர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

நிதிப் பற்றாக்குறையால் நகரின் அத்தியாவசியப் பணிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் செய்ய முடியவில்லை. இதை சமாளிக்கும் பொருட்டு தீவிர வசூல் செய்யப்படுகிறது.

தற்போது வரி செலுத்தாதவர்களிடம் இருந்து வரி வசூல் செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நீண்ட நாள் வரி செலுத்தாத வீடு, கடை, வணிக வளாகம் உள்ளிட்ட உரிமையாளர்கள் யார் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் பெயர், செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை ஆட்டோவில் அவர்கள் பகுதிகளுக்குச் சென்று ஒலிபெருக்கி மற்றும் டாம் டாம் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இதேபோல் குடிநீர் கட்டணமும் செலுத்தாமல் உள்ளனர். இக்கட்டணத்தைச் செலுத்தாதவர்கள் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியில் நகராட்சி  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் ஜப்தி நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

முறையான அறிவிப்பும் கால அவகாசமும் அளித்தும் வரி பாக்கி செலுத்தாத வீடு, கடை மற்றும் வணிக வளாகங்கள் முன்பு நகர நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை வைத்து நூதன முறையில் வரி வசூல் செய்து வருகிறது.
 

கரூர் நகராட்சியில் 95 சதவீத வரி பாக்கி வசூலிக்க இலக்கு நிர்ணயம்

Print PDF

தினத்தந்தி               23.03.2013

கரூர் நகராட்சியில் 95 சதவீத வரி பாக்கி வசூலிக்க இலக்கு நிர்ணயம்

கரூர் நகராட்சியில் 95 சதவீத வரி பாக்கியை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

14 நகராட்சி நிர்வாகங்கள்

கரூர் நகராட்சி அலுவல கத்தில் வரி வசூலிப்பு மையம் இயங்கி வருகிறது. இதனுடன் கூடுதலாக இனாம் கரூர், தாந்தோணி நகராட்சியிலும் வரி வசூல் மையங்கள் கணினி மூலமாக இணைக்கப்பட்டு செயல்படுகிறது. இதுதவிர குறிப்பிட்ட வங்கிகளிலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் , சொத்து வரி, கடை வாடகை போன்ற வற்றை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு இருக் கிறது.

கரூர் உள்பட 14 நகராட்சி நிர்வாகங்கள் சேலம் நகராட்சி மண்டலத்தில் இணைக்கப் பட்டுள்ளது. கடந்த 19ந் தேதி சேலத்தில் வரி வசூல் தொடர்பான கூட்டம் நடை பெற்றது. இதில் நகராட்சி களின் நிர்வாக இணை இயக்குனர் கலந்து கொண்டு வரி வசூல் ஆய்வு பணி மேற் கொண்டார்.

அப்போது வரி வசூலில் இலக்கை அடையும் நகராட்சி களுக்கு அரசின் சிறப்பு மானிய தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.அதன்படி கரூர் நகராட்சியில் 95 சதவீத வரி பாக்கியை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வரி வசூல்

இதன்படி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய் அதிகாரி சுருளிநாதன், ஆய்வர் ஜலால் ஆகியோர் வரி வசூலில் ஈடுபட்டு உள்ளனர். மக்கள் பாதையில் வரி வசூல் நடைபெற்றது. இதில் வரி நிலுவை வைத்திருப் பவர்கள் பலர் வந்து வரியை செலுத் தினர். குடிநீர் கட்டணம் பாக்கி வைத்திருப் பவர் களிடம் பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது.

அரசின் சிறப்பு மானியம்

95 சதவீத வரியை இம்மாத இறுதிக்குள் வசூல் செய்தால் கரூர் நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு அரசின் சிறப்பு மானியம் கிடைக்கும் என அலுவலர்கள் தெரிவித் தனர்.

 

கோவை மாநகராட்சியில் குடிநீர், சொத்து வரி ரூ.102.23 கோடி வசூல்

Print PDF
தினகரன்          23.03.2013

கோவை மாநகராட்சியில் குடிநீர், சொத்து வரி ரூ.102.23 கோடி வசூல்

கோவை:கோவை மாநகராட்சிக்கு 2012&13 இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்க செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி முதலிய அனைத்து நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகைகளை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையம் தினசரி மாலை 5 மணி வரை செயல்படுகின்றன.

வரும் 24 மற்றும் 31 ம் தேதி ஞாயிற்று கிழமையும் அனைத்து வரி வசூல் மையமும் வழக்கம் போல செயல்படும். குறிச்சி மற்றும் கோவைப்புதூர் பகுதிகளில் உள்ள பொது மக்கள் வரி செலுத்த ஏதுவாக பழைய குறிச்சி நகராட்சி அலுவலகத்திலும், கோவைப்புதூரில் நாகபிள்ளையார் கோவில் அருகில் உள்ள புதிய நூலக கட்டிடத்திலும் இரண்டு வரி வசூல் மையம் திறக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 2.52 லட்சம் குடிநீர் இணைப்பு உள்ளன. இதன் மூலம் ரூ.25.82 லட்சம்  வசூல் ஆக வேண்டியதில், ரூ 17.83 கோடி வசூலாகி உள்ளது. மீதி ரூ.7.98 கோடி வசூலாக வேண்டியுள்ளது. 69 சதவிகிதம் குடிநீர் வரி வசூலாகி உள்ளது.கோவை மாநகராட்சியில் ரூ.84.40 கோடி வரி வசூலாகி உள்ளது. மீதி ரூ 19.25 கோடி வசூலாக வேண்டியுள்ளது. 81 சதவிகித வரி வசூலாகி உள்ளது. குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி மூலம் மொத்தம் ரூ.102 கோடியே 23 லட்சம் வசூலாகி உள்ளது.
 


Page 21 of 148