Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

குடிநீர் இணைப்பு துண்டிப்பு தவிர்க்க அவசரமாக பணம் செலுத்திய மக்கள்

Print PDF
தினகரன்           12.03.2013

குடிநீர் இணைப்பு துண்டிப்பு தவிர்க்க அவசரமாக பணம் செலுத்திய மக்கள்


உடுமலை: வரி நிலுவை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கஅதிகாரிகள்  வந்தனர்.

அதைத்தொடர்ந்து  வீட்டு உரிமையாளர்கள் அவசரம் அவசரமாக பணம் கட்டினர். உடுமலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா கூறியதாவது:

உடுமலை நகராட்சியில் 2012-13ம் ஆண்டுக்கான வீட்டு வரி மொத்தம் ரூ.2 கோடியே 35 லட்சம். இதில் இதுவரை ரூ.2 கோடியே 23 லட்சம் வசூலாகியுள்ளது. மீதி ரூ.11 லட்சத்து 99 ஆயிரம் வசூலாக வேண்டும். குடிநீர் வரி மொத்தம் ரூ.77 லட்சத்து 81 ஆயிரம். வசூலானது 76 லட்சத்து 81 ஆயிரம். இன்னும் ரூ.1 லட்சம் வசூலாக வேண்டும்.

கடந்த ஆண்டு 100 சதவீத வசூல் இலக்கை உடுமலை நகராட்சி எட்டியது. தற்போது 99 சதவீதம்தான் வசூலாகி உள்ளது. வரும் 31ம்தேதிக்குள் வரி நிலுவையை மக்கள் செலுத்திவிட வேண்டும்.

இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

நீண்ட நாட்களாக குடிநீர் வரி கட்டாத 15 வீடுகளுக்கு இணைப்பு துண்டிக்க நகராட்சி அதிகாரிகள் நேற்று சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக வரி பாக்கியை அந்த இடத்திலேயே செலுத்தினர்.
 

சொத்து வரி வசூல்: ரூ. 550 கோடி இலக்கு

Print PDF
தினமணி         12.03.2013

சொத்து வரி வசூல்: ரூ. 550 கோடி இலக்கு


2013-14ஆம் நிதியாண்டில் சொத்துவரி ரூ. 550 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிலைக்குழு (வரிவிதிப்பு மற்றும் நிதி) தலைவர் சே. சந்தானம் கூறியது: கடந்த 2012-13ஆம் ஆண்டில் ரூ. 500 கோடி சொத்துவரியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 2013-14ஆம் நிதியாண்டில் இந்த வருவாய் ரூ. 550 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, தொழில்வரி மூலம் ரூ. 230 கோடி வருவாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கேளிக்கை வரி மூலம் ரூ. 15 கோடியும், முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ. 120 கோடியும், மாநில நிதிக் குழு மானியம் மூலம் ரூ. 550 கோடியும் வருவாய் இருக்கும்.

இதர வருவாய்கள் மூலம் ரூ. 416.53 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
 

சொத்துவரி நிலுவை: என்டிஎம்சி அறிவிப்பு

Print PDF
தினமணி         11.03.2013

சொத்துவரி நிலுவை: என்டிஎம்சி அறிவிப்பு

புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி.) உள்பட்ட பகுதிகளில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்டிஎம்சி அறிவித்துள்ளது.

என்டிஎம்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாராகம்பா ரோடிலுள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மூன்று கட்டடங்களுக்கு  ரூ. 10 கோடி சொத்துவரி நிலுவை உள்ளது.  இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து வரி நிலுவை செலுத்தப்படும்போது, 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெரிவித்தும் பதில் ஏதும் பெறப்படவில்லை'' என்றார்.
 


Page 24 of 148