Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

பத்மநாபபுரத்தில் வரி நிலுவை ரூ.1.27 லட்சம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF
தினமணி                   28.02.2013

பத்மநாபபுரத்தில் வரி நிலுவை ரூ.1.27 லட்சம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை,  நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

பத்மநாபபுரம் நகராட்சியில் இரட்டிப்பு வரி விதிப்பாக இருப்பதால், நிலுவைத்தொகை ரூ.1.27 லட்சத்துக்கு மேல் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் மேத்யூஜோசப், சுகாதார அலுவலர் டெல்விஸ்ராஜ், துணைத் தலைவர் பீர்முகமது மற்றும் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன் உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன் பேசுகையில், கூட்டப்பொருளில் 21 வார்டுகளில் அமைந்துள்ள 91 கட்டடங்களுக்கு புதிய வீடுகள் கட்டப்பட்டு, பழைய வரிவிதிப்பு எண்கள் நீக்கம் செய்யப்படாமல் நிலுவையிலுள்ளது.

இரட்டிப்பு வரி விதிப்பாக இருப்பதால் பழைய சொத்து வரி விதிப்பு எண்களின் மீதான நிலுவைத்தொகை ரூ.1.27 லட்சம், நடப்பு வசூல் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, சொத்துவரி கேட்பிலிருந்து வஜா செய்ய மன்றத்தில் கேட்டு இருக்கிறீர்கள். இது அதிகாரிகள் செய்த தவறு. இதற்கு மன்றத்தின் அனுமதி கேட்பது தவறு.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார் அவர். இதற்கு ஆணையர் மேத்யூ ஜோசப் பதிலளிக்கையில், இதில் முறைகேடோ, பண இழப்போ கிடையாது. இது 2006-ல் இருந்தே வருவாய் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் செய்த தவறினால் வந்தது. இதை முன்னரே சம்பந்தப்பட்டவர்கள் கவனித்திருக்க வேண்டும். மன்ற உறுப்பினர்கள் என்ன முடிவு சொல்கிறீர்களோ அதன்படி செய்யலாம் என்றார்.

உறுப்பினர் பெரும்பான்மையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூறினர். தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி,
அக்காலகட்டங்களில் பணியாற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றலாம் என்றார்.

மேலும் உறுப்பினர்கள் சசீதரன் நாயர், உவைஷ் உள்ளிட்டோர் பேசினர்.
Last Updated on Friday, 01 March 2013 09:25
 

இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு இப்போதைக்கு பழைய சொத்து வரி!

Print PDF
தினமணி                   28.02.2013

இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு  இப்போதைக்கு பழைய சொத்து வரி!


திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்கல்கண்டார்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு பழைய கணக்கீட்டின் அடிப்படையிலேயே சொத்து வரி வசூலிக்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது. 60 வார்டுகளாக இருந்த திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பகுதி பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 65 வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இணைக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே அந்தந்த ஊராட்சிகளில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதே கணக்கீட்டில் சொத்து வரியை வசூலிக்க புதன்கிழமை திருச்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.

60 வார்டுகளின் சொத்து வரி (ஒரு சதுர அடிக்கு- ஏ,பி,சி,டி மண்டலங்கள் வரிசைப்படி): குடியிருப்புப் பகுதிகள்- ரூ. 1.20, 1.00, 0.80, 0.70. வணிகப் பகுதிகள்- ரூ. 2.40, 2.00, 1.60, 1.40. தொழிற்சாலைகள்- ரூ. 3.60, 3.00, 2.40, 2.10.

இணைக்கப்பட்ட பகுதிகளில், திருவெறும்பூர் பேரூராட்சியில் பழைய சொத்து வரி (ஒரு சதுர அடிக்கு- ஏ,பி,சி மண்டலங்கள் வரிசைப்படி):
குடியிருப்பு- ரூ. 0.75, 0.50, 0.30. வணிகம்- ரூ. 2.25, 1.50, 0.90. தொழிற்சாலை- ரூ. 1.50, 1.00, 0.70. பாப்பாக்குறிச்சி ஊராட்சியில் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிக்கு அடிப்படைக் கட்டணம் ரூ. 0.25.

எல்லக்குடி ஊராட்சியில் குடியிருப்புக்கு ரூ. 0.30, வணிகப் பகுதிக்கு ரூ. 0.50. ஆலத்தூர் ஊராட்சியில் குடியிருப்புக்கு ரூ. 0.25, வணிகப் பகுதிக்கு ரூ. 0.25. கீழக்கல்கண்டார்கோட்டை ஊராட்சியில் குடியிருப்புக்கு ரூ. 0.20, வணிகப் பகுதிக்கு ரூ. 0.25.

இந்த மூன்று ஊராட்சிகளிலும் வீட்டு வரி:

கூரை வீட்டுக்கு ரூ. 40, தொகுப்பு வீட்டுக்கு ரூ. 50. அரசின் அடுத்த அறிவிப்பு வரும்வரை இதே பழைய கட்டணத்தையே வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
Last Updated on Friday, 01 March 2013 09:19
 

"வரிபாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை

Print PDF
தின மணி              26.02.2013

"வரிபாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை


வேட்டவலம் பேரூராட்சிக்கு செலுத்தவேண்டிய வரிபாக்கியை உடனே செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் எச்சரித்துள்ளார்.

வேட்டவலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 2012 அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர வரியினங்களை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தவறினால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஏற்படும் செலவுத் தொகை சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:57
 


Page 28 of 148