Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

குடிநீர் வரி வசூல் செய்வதில் சிக்கல்: பொதுமக்கள் ஆவேசம்

Print PDF
தின மலர்                26.02.2013

குடிநீர் வரி வசூல் செய்வதில் சிக்கல்: பொதுமக்கள் ஆவேசம்

சேலம்: சேலம் மாநகராட்சியில், முறையாக, குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால், குடிநீர் வரியை வசூல் செய்வதில், அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில், சொத்துவரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்டவற்றை வசூல் செய்யும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் இறுதிக்குள் நிலுவை வரியை வசூல் செய்வதற்காக, நான்கு மண்டலங்களில், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தும், ஆட்டோக்கள் மூலம், அறிவிப்பு வெளியிட்டும், வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தினமும் சொத்துவரி மூலம் லட்சக்கணக்கான ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மாநகராட்சி பகுதியில், சில மாதங்களாக, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல வார்டுகளில், மாதம் இரண்டு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒவ்வொரு வார்டிலும், வரி வசூல் பணியில் ஈடுபட்டுள்ள பில் கலெக்டர் உள்ளிட்ட வரி வசூல் பணியாளர்களிடம், பொதுமக்கள், குடிநீர் பிரச்னையை சுட்டிக்காட்டி, குடிநீர் வரியை, உடனடியாக செலுத்தாமல், இழுத்தடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு சில வார்டுகளில், கெடுபிடி காட்டும், வரி வசூல் பணியாளர்களிடம், பொதுமக்கள் காட்டமாக வாக்கு வாதம் செய்கின்றனர். மாநகராட்சி பணியாளர்கள் வேறு வழியில்லாமல், சொத்துவரி, கடை வாடகை உள்ளிட்டவற்றை மட்டுமே அதிகளவில் வசூல் செய்து வருகின்றனர்.

மார்ச் மாதம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், குடிநீர் வரியை வசூல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், குடிநீர் வரியை வசூல் செய்யும் போது, இதுப்போன்ற பிரச்னை ஏற்படுவது வழக்கமாகும். ஆனால், சில மாதங்களாக, குடிநீர் பிரச்னையால், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், ஒரு சில வார்டுகளில், குடிநீர் வரியை கேட்டு செல்லும், மாநகராட்சி பணியாளர்களிடம், சிலர் வாக்குவாதம் செய்கின்றனர். பலர் மார்ச் மாதம் முடிந்தவுடன் தருவதாக கூறி அலைக்கழிக்கின்றனர்.இவ்வாறு கூறினார்.

Last Updated on Tuesday, 26 February 2013 11:35
 

மாநகராட்சி கடைகளுக்கு 15 சதவீத வாடகை உயர்வு

Print PDF
தின மலர்                26.02.2013

மாநகராட்சி கடைகளுக்கு 15 சதவீத வாடகை உயர்வு


கோவை மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள மூன்றாண்டு நிறைவடைந்த கடைகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு செய்யவும், குத்தகைக்கு விடப்பட்டு ஒன்பதாண்டு முடிவடைந்த கடைகளுக்கு புதிதாக வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் ஆண்டுக்கு 16.70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சி வருவாய் இனத்தில் குத்தகை இனங்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைப்பதால், மாநகராட்சியில் வர்த்த பயன்பாட்டிலுள்ள ரிசர்வ் சைட்களில்<, வணிக வளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் முயற்சி நடக்கிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உத்தரவுப்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளை பொது ஏலம் விடுவதை தவிர்த்து, குத்தகையை நீட்டித்தல் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.கோவை மாநகராட்சியில் கடந்த 2004ல், இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாடகை வசூலிக்கப்படுகிறது. கடைகளின் உரிமக்காலம் நிறைவடையும் போது, 15 சதவீதம் <உயர்வு செய்து மாத வாடகை நிர்ணயம் செய்யவும், ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த கடைகளுக்கு பொதுப்பணித்துறை மூலம் வாடகை மதிப்பீடு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த கடைகளுக்கு, சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்கு 15 சதவீதம் உயர்வு செய்யப்பட்டுள்ளது.பட்டேல் ரோடு வணிக வளாகத்தில் 30 கடைகள், சத்தி ரோடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் 32 கடைகள், ராஜி நாயுடு ரோடு வணிக வளாகத்தில் 19 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. காந்திபுரம் அண்ணா வணிக வளாக கடைகளுக்கு சதுர அடிக்கு 75 ரூபாய் என வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வாடகை உயர்வுடன் சேவை வரி 12.36 சதவீதம் செலுத்த ஒப்புக்கொள்ளும் உரிமதாரர்களுக்கு கடைகளை ஒப்படைக்கவும், புதிய வாடகையை ஏற்றுக்கொள்ளாத உரிமதாரர்களின் உரிமத்தை ரத்து செய்து, கடையை மறுஏலம் கொண்டு வரவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதேபோன்று மாநகராட்சியில் உள்ள அதனைத்து வணிக வளாக கடைகளின் பட்டியலையும் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ""நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2000, டிச., 30ம் தேதி, குத்தகை இனங்களுக்கு வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஒன்பது ஆண்டுக்கு ஒரு முறை சந்தை மதிப்புக்கு ஏற்ப, வாடகை மறுநிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2007, ஜூலை 3ல் வெளியான அரசாணைப்படி, மூன்றாண்டுக்கு ஒருமுறை நடப்பு வாடகையில் 15 சதவீதம் உயர்வு செய்யப்படுகிறது. இரு அரசாணை நெறிமுறைகளின்படி, குத்தகை இனங்களுக்கு வாடகை நிர்ணயித்து, சேவை வரியுடன் வசூலிக்கப்படுகிறது. வாடகை உயர்வு வரும் ஏப்., 1ல் இருந்து அமலாகிறது'' என்றனர்.

Last Updated on Tuesday, 26 February 2013 11:39
 

மாநகராட்சி தொழில்வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்

Print PDF
தின மணி          23.02.2013

மாநகராட்சி தொழில்வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்


தொழில்வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும், தொழில் உரிமங்களை மார்ச் 31-க்குள் புதுப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: மத்திய, மாநில அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள், மத்திய மாநில அரசு நிறுவனங்கள், தனியார் விளம்பர நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டவர்கள் 2012-13 இரண்டாம் அரையாண்டுக்கான தொழில் வரியை மாநகராட்சிக்கு செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்கு முந்தைய அரையாண்டுகளுக்கான தொழில்வரி நிலுவையில் இருப்பின் அதற்கான தொகையையும் சேர்த்து மார்ச் 31-ம் தேதிக்குள் வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலையாகவோ, கேட்பு வரைவோலையாகவோ செலுத்த வேண்டும்.

உரிமம் புதுப்பித்தல்: 2013-14 நிதியாண்டுக்கான தொழில் உரிமங்களை மார்ச் 31-க்குள் புதுப்பிக்க வேண்டும். மண்டல அலுவலகங்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை உரிமங்களைப் புதுப்பிக்கலாம்.

மார்ச் 31-க்குள் உரிமம் புதுப்பிக்கத் தவறும் பட்சத்தில் நிர்ணயிக்கப்பட்ட உரிமத் தொகையில் 50 சதவீதம் அபராதமாக செலுத்தி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

உரிமக் கட்டணத்துடன், துப்புரவு கட்டணத்தை சேர்த்து ஒரே வரைவு காசோலையாக வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் செலுத்த வேண்டும்.
Last Updated on Monday, 25 February 2013 11:13
 


Page 29 of 148