Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்தாத 114 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: தெற்கு தில்லி மாநகராட்சி பரிசீலனை

Print PDF
தினமணி                      05.09.2012

வரி செலுத்தாத 114 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: தெற்கு தில்லி மாநகராட்சி பரிசீலனை

புது தில்லி, செப். 4: வரி செலுத்தாத 114 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்குவது குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

"பல முறை நினைவூட்டல் கடிதங்கள், நோட்டீஸ்கள் அனுப்பியும் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை அவர்கள் செலுத்தவில்லை.எனவே, அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்' என்று மாநாகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர்கள் செலுத்த வேண்டிய மொத்த நிலுவை வரி ரூ. 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தெற்கு தில்லியின் மத்திய மண்டலப் பகுதியில் 60 பேரும், தெற்கு மண்டலத்தில் 29 பேரும், நஜஃப்கர் மண்டலத்தில் 25 பேரும் சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தில்லியின் மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் 40 லட்சம் வீடுகள், கட்டடங்கள் இருக்கின்றன.வரி நிலுவை வைத்திருப்போரின் சொத்துகளை ஏலத்தில் விடுவது குறித்து கடந்த ஆண்டு, தில்லி மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக பரிசீலிக்கப்பட்டது. எனினும், மாநகராட்சி பிரிப்பு காரணமாக அது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.
 

வரி செலுத்த அறிவிப்பு

Print PDF

தினமலர்                                   03.09.2012

வரி செலுத்த அறிவிப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி வரி பாக்கியினை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி ஆணையர் அண்ணாதுரை செய்தி குறிப்பு: திண்டிவனம் நகர எல்லைகுட்பட்ட பகுதிகளில் வசிப்போர், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, மற்றும் அனைத்து இனங்களில் உள்ள நிலுவை தொகைகளை வரும் 10ம் தேதிக்குள், நகராட்சியில் செலுத்த வேண்டும்.செலுத்த தவறினால், நகராட்சி சார்பில் ஜப்தி நடிவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அரசு நிறுவன விளம்பர பதாகைகளுக்கு சொத்து வரி: தெற்கு தில்லி மாநகராட்சி முடிவு

Print PDF
தினமணி                     30.08.2012

அரசு நிறுவன விளம்பர பதாகைகளுக்கு சொத்து வரி: தெற்கு தில்லி மாநகராட்சி முடிவு


புது தில்லி, ஆக. 29: தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசு நிறுவனங்களின் விளம்பர பதாகைகளுக்கும் சொத்து வரி வசூலிக்கப்படும் என்று தெற்கு தில்லி மாநகராட்சியின் வரி வசூல் அதிகாரி பி.என். சிங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: தெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாநகராட்சி இதுவரை வரி விதிக்கவில்லை.

தற்போது அவற்றுக்கு சொத்து வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தில்லி மெட்ரோ, பி.எஸ்.இ.எஸ்., தில்லி டிரான்ஸ்கோ, தில்லி வக்ஃப் போர்டு, தில்லி சுற்றுலாத் துறை, தில்லி போக்குவரத்து நிறுவனம் ஆகியவை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எத்தனை விளம்பர பதாகைகள் வைத்துள்ளன என்று பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது விதிக்கப்படும் சொத்து வரி, இடத்தை மையமாக வைத்து நிர்ணயிக்கப்படும்.

பெட்ரோல் பங்குகள், சி.என்.ஜி. நிலையங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கும் என்று அவர் கூறினார்.
 


Page 30 of 148