Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலப்பள்ளம் பேரூராட்சியில் இணைப்பு சாலை பணி துவக்கம்

Print PDF

தினமணி     14.05.2010

பாலப்பள்ளம் பேரூராட்சியில் இணைப்பு சாலை பணி துவக்கம்

கருங்கல், மே 13: கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பேரூராட்சியில் இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்ட 4-வது வார்டு பகுதியில் மிடாலக்காடு வாய்க்கால்கரை சுற்றுவட்டாரப் பகுதில் உள்ள மக்கள் பக்கச் சுவருடன் இணைப்பு சாலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து, இப்பகுதி மக்கள் பாலப்பள்ளம் பேரூராட்சித் தலைவி கில்டா ரமணியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இப் பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்து பக்கச் சுவர் மற்றும் மிடாலக்காடு, வடக்கு மிடாலக்காடு இணைப்பு சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவி கில்டா ரமணி பாய் துவக்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் சந்திரகுமார், சாந்தகுமார், ஜெயக்குமார், ஜோசப் சுந்தர்ராஜ், அமலதாஸ் மற்றும் ஊர்மக்கள் பங்கேற்றனர்