தினகரன் 18.05.2010
உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் புதிய சாலைகள் திறப்பு விழா
மார்த்தாண்டம், மே 18: உண்ணாமலைக்கடை பேரூ ராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சாலைகளை பாஜ மாவட்டத் தலைவர் தர்மராஜ் திறந்து வைத் தார்.
உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதியில் ரூ. 20 லட்சம் செலவில் கோட்டகம் பிருந்தாவன் சாலை, ரூ. 17 லட்சம் செலவில் மாமூட்டுக் கடை, கட்டத்திவிளை வழியாக விரிகோடு சாலை அமைக்கும் பணி கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் நடந்தன. இந்த இரு புதிய சாலைகளுக் கான திறப்பு விழா கோட்டகத்தில் நடந்தது.
உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமை வகித் தார். கவுன்சிலர்கள் நிர் மலா, லூகாஸ், ஜெயக்குமார், சசி குமார், முன் னாள் கவுன்சிலர் நாக ராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பாஜ மாவட்டத் தலைவர் தர்ம ராஜ் திறந்து வைத்து பேசி னார்.
பாஜ மாவட்ட அமை ப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார், கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் மோகன்சந்திரகுமார், மாவட்டச் செயலாளர் விஜயபிரசாத், ஒன்றிய இணை அமைப்பாளர் விஜயகுமார், பொதுச்செயலாளர் ரமேஷ், வியாசர் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண் டனர்