தினகரன் 18.05.2010
சுரண்டை& பாவூர்சத்திரம் சாலையை செப்பனிட ரூ.2 கோடி ஒதுக்கீடு
சுரண்டை, மே 18: சுரண்டை பேரூராட்சியில் 8 ஆயிரம் பேருக்கு இலவச கலர் டிவி யை கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சுரண்டை பேரூராட்சிக் குட்பட்ட பங்களா சுரண் டை விலக்கில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியி லிருந்து ரூ.3 லட்சத்தில் புதிய பஸ் நிறுத் தம் கட்டப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவி கோமதி பழனி நாடார் தலைமை வகித்தார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனி நாடார், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் அறங் காவலர்குழு தலைவர் எஸ்.வி.கணேசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பா ளர் அப்துல் காதர், சுரண் டை நகரச் செயலாளர் முத்துக்குமார், கீழப்பாவூர் ஒன்றிய செய லாளர் வக்கீல் சிவ.பத்ம நாதன், ஆகியோர் முன்னி லை வகித்தனர். பேரூராட்சி நிர்வாக அதிகாரி சாமு வேல் துரைராஜ் வரவேற் றார்.
கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ புதிய பஸ் நிறுத்தத் தை திறந்து வைத்தார். மேலும் பிளஸ்&2வில் 1121 மார்க் எடுத்து சாதனை படைத்த சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மாணவி கனி மொழிக்கு நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து சுரண்டை ஊர்க்காவலன் பெருமாள் கோயில் வளாகம் மற்றும் கேடிகே வளாகம் ஆகிய இரு இடங்களில் தமிழக அரசின் இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சி பேரூ ராட்சி தலைவி கோமதி பழனிநாடார் தலைமையில் நடந்தது. 8496 பேருக்கு கலர் டிவிக்களை கருப்ப சாமி பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார்.
அவர் பேசியதாவது: முதல்வர் கருணாநிதி 8496 பேருக்கு ரூ.இரண்டரை கோடியில் வழங்கிய டிவிக் கள் சுரண்டையில் சீதன மாக வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தின் தலைவர் எப் படி நிர்வாகம் நடத்துவாரோ அதுபோல் கலைஞர் நம்மை காத்து வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் திருமண உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது. ஆனால் கருணாநிதி ஆட் சிக்கு வந்ததும் அந்த தொகை உயர்த்தப்பட்டு ரூ.25 ஆயிரமாக வழங்கப் படுகிறது.
சுரண்டையில் கலைக் கல்லூரி அமைக்க இந்து நாடார் சமுதாயத் துக்கு பாத்தியப்பட்ட 26 ஏக்கர் நிலத்தை நன்கொடை யாக வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து அரசு மூன்ற¬ரை கோடி ரூபாய் ஒதுக்கி தற்போது கல்லூரி கட்டும் பணி நடந்து வரு கிறது. சுரண்டை& பாவூர் சத்திரம் சாலையை விரிவு படுத்தவும், செப்பனிடவும் அரசு ரூ.2 கோடியே 10 லட்சம் ஒதுக் கியுள்ளது.
இதற்கான டெண்டர் விடப்பட்டு விரைவில் பணி தொடங்க உள்ளது. இது போல் பல வளர்ச்சி திட்டங் கள் சுரண் டை பகுதியில் நடந்து வரு கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் வீகே புதூர் தாசில்தார் மணிபாபு, கீழப் பாவூர் ஒன்றிய சேர்மன் எஸ்கேடிபி காமராஜ், மாநில காங்.பொதுக்குழு உறுப் பினர் கலைவேந்தன் சாமி நாதன், நகர துணைத் தலை வர் பால் என்ற சண்முகவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஜெய ராஜ், முப்பிடாதி பாண்டி யன், ஊராட்சிமன்ற தலை வர்கள் குலசேகரப் பட்டி மணிவண்ணன், இடையர் தவணை ராமசாமி, கல்லூரணி அருணோதயம், நகரச்செயலாளர்கள் சம்பவர்வடகரை மாறன், சுந்தரபாண்டியபுரம் செல்வராஜ், ஒன்றிய பிரதிநிதிகள் டென்னிசன், ஜீவன் சத்ய ராஜ், ஜெயபால், பாலன், அரவிந்த், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், அறங் காவலர் வைத்தீஸ்வரி, தென்காசி நகராட்சி தலை வர் கோமதிநாயகம், செங்கோட் டை ஒன்றிய இளைஞரணி அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ தகவல்