Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல்லக்குடி பேரூராட்சி சாலை பணி: டால்மியா சிமென்ட் ஆலை நிதி உதவி

Print PDF

தினமலர்     15.05.2010

கல்லக்குடி பேரூராட்சி சாலை பணி: டால்மியா சிமென்ட் ஆலை நிதி உதவி

டால்மியாபுரம்: புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி பேரூராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருச்சி-சிதம்பரம் சாலையில் இருந்து கல்லக்குடி பஸ் நிலையம் வழியாக போலீஸ் ஸ்டேஷன் வரை ரூ.57.60 லட்சம் செலவில் தார்ச்சாலை, சாக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா டால்மியாபுரத்தில் நடந்தது.

இத்திட்டத்திற்கு டால்மியா சிமென்ட் நிறுவனம் ரூ.19.20 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளது. இவ்விழாவிற்கு டால்மியா சிமென்ட் ஆலை செயல் இயக்குனர் குங்குனே தலைமை வகித்து திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். கல்லக்குடி பேரூராட்சித் தலைவர் குழந்தைதெரஸ், துணைத் தலைவர் செல்வகுமார், முன்னாள் தலைவர் ஆரோக்கியசாமி, செயல் அலுவலர் ராஜேந்திரன், டால்மியா சிமென்ட் ஆலை பொது மேலாளர் நயினாராஜ், ரமேஷ் பாபு, தொழிற் சங்க பொதுச் செயலாளர் அருணாசலம், ஒப்பந்தக்காரர் முருகவேல், கவுன்சிலர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.