Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை அமைக்கும் பணி அரசுக்கு கவுன்சிலர் நன்றி

Print PDF

தினகரன்        25.05.2010

சாலை அமைக்கும் பணி அரசுக்கு கவுன்சிலர் நன்றி

புதுச்சேரி, மே 25: புதுச்சேரி நகராட்சி திருவள்ளுவர் நகர் கவுன்சிலர் ராஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் வார்டில் எனது முயற்சியால் ரூ.30 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு முன்பாக சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுப்பணி குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சண்முகவேலு உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சிறப்புகூறு நிதி மற்றும் நாரா.கலைநாதன் எம்எல்ஏ தொகுதி மேம் பாட்டு நிதி மூலம் திருவள்ளுவர் நகர் முழுவதும் சிமெண்ட் சாலை அமைக் கும் பணி நடந்து வருகிறது. நகர் முழுவதும் சோடியம் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்புகூறு நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் கள் கந்தசாமி, நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் சிவா, நாரா.கலைநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.