தினகரன் 25.05.2010
சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
பண்ருட்டி, மே 25: பண்ருட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் பச்சையப்பன் பார்வையிட்டார். பண்ருட்டி நகராட்சி சார்பில் 24வது வார்டு பகுதியில் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று நகர் மன்ற தலைவர் பச்சையப்பன் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். கலவை சரியாக இருக்க வேண்டும். பணி தரமாக நடைபெற வேண்டும் என கூறினார். அதனை தொடர்ந்து காந்தி மெயின்ரோட்டில் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.
பின்னர் 15வது வார்டு பகுதியில் குறுகிய அளவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை அகலமாக்கி புதிதாக வாய்க் கால் கட்டும் இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆணையாளர் உமா மகேஸ்வரி, பொறியாளர் சுமதி செல்வி, மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.