தினகரன் 01.06.2010
திருத்துறைப்பூண்டியில் சாலை மேம்பாட்டு பணிக்கு ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீடு
திருத்துறைப்பூண்டி, ஜூன் 1: திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் பாண்டியன், மேலாளர் கிளமன்ட் அந்தோணிராஜ், துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், கணக்கர் மீராமன்சூர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கொருக்கையில் அரசு தொழில்நுட்ப கல்லூரி துவங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:
சிக்கந்தர்: நகரில் குடிநீர் ஏற்படும் பற்றாக்குறைக்கு நடவடிக்கை வேண்டும்.
சாமிநாதன்: நகரில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்தவேண்டும். சன்னதி தெருவுக்கு மின் விளக்கு வேண்டும்.
பக்கிரிசாமி: நகரில் உள்ள குளங்களை தூர் வாருதல், 100 நாள் வேலைத்திட்டத்தை நகர் பகுதிக்கு விரிவாக்கம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிப்பு போன்ற நடவடிக்கை வேண்டும்.
மாயா: மீன், இறைச்சி விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
எழிலரசன்: பிளாஸ்டிக் பையை தடைசெய்வதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் விநியோகிக்க வேண்டும்.
ஹாஜா மைதீன்: நகரில் 24 வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடவேண்டும்.
சக்திவேல்: குடிநீர் பிரச்னை பற்றியும், ஜிம்மா பானு: அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர், கூடுதல் போலீஸ் நியமனம் பற்றியும் பேசினர்.
சண்முக சுந்தர்: அனுமதியில்லாத குடிநீர் இணை ப்பு குறித்து நடவடிக்கை வேண்டும். உறுப்பினர்கள், கலைவதி, கலாவதி, ராஜே ஸ்வரி, வீரமணி, ரேவதி,