Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுநயினார்புரத்தில் சிமெண்ட் ரோடு திறப்பு விழா

Print PDF

தினமலர் 08.06.2010

புதுநயினார்புரத்தில் சிமெண்ட் ரோடு திறப்பு விழா

சாயர்புரம் : சாயர்புரம் டவுன் பஞ்.,குட்பட்ட புதுநயினார்புரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் ரோடு திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு சாயர்புரம் டவுன் பஞ்.,தலைவர் பொன்சேகர் தலைமை வகித்தார். புதுநயினார்புரம் ஊர்த் தலைவர் முருகானந்தராஜ் முன்னிலை வகித்தார். ராகவன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்..,சுடலையாண்டி கலந்து கொண்டு புதிய சிமெண்ட் ரோட்டை திறந்து வைத்துப் பேசினார். விழாவில் முன்னாள் ஒன்றிய திமுக.,கவுன்சிலர் சுந்தரபாண்டியன், டவுன் பஞ்.,கவுன்சிலர் தங்கரதி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபாண்டியன் மற்றும் ஆனந்தராஜ், விஜி, ராமசாமி, செந்தூர்பாண்டி, சித்திரைவேல், பட்டுராஜன், குணசேகர், ஜெயக்குமார், சுயஉதவிக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.