Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அறிவிப்பு நரைனா தொழிற்சாலை பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பு

Print PDF

தினகரன் 09.06.2010

மாநகராட்சி அறிவிப்பு நரைனா தொழிற்சாலை பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பு

புதுடெல்லி, ஜூன் 9: நரைனா தொழிற்சாலை பகுதியில் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படாத கான்கிரீட் சாலை அமைக்கப்படும்என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுபற்றி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால், சாலைகள் பாதிக்கப்பட்டு, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்படி 104 சாலைகள் உள்ளன. எனவே மழை,வெயில் எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத அளவுக்கு கான்கிரீட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக நரைனா தொழிற்சாலை பகுதியில் இப்படிப்பட்ட கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இதற்கான ஏல ஒப்பந்தங்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

கான்கிரீட் சாலை அமை க்க ஏலம் எடுக்கும் ஒப்பந்ததாரர் நெடுஞ்சாலை விதிகளுக்கு உட்பட்டு சாலையை அமைக்க வேண்டும். மழை நீரை சேமிக்க தேவையான வசதிகளை செய்யவேண்டும். அத்துடன் சாலையின் இரு ஓரங்களிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபாதை அமைக்க வேண்டும். சாலையின் மத்தியில் தடுப்புச் சுவரும் கட்டித்தர வேண்டும். சாலையின் எந்த இடத்திலும் மழை நீர் தேங்கக் கூடாது.இப்படி மாநகராட்சியின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து கான்கிரீட் சாலை யை ஒரு ஆண்டுக்குள் அமைக்க வேண்டும்.இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.