தினகரன் 22.06.2010
டி.வி.டி காலனியில் ரூ.16 லட்சத்தில் தார்சாலை
நாகர்கோவில், ஜூன் 22: நாகர்கோவில் நகராட்சி 15 வது வார்டான டி.வி.டி காலனியில் தார்சாலை மற்றும் கழிவு நீரோடை அமைக்க நகராட்சி சார்பில் ரூ.16.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை நேற்று காலை சேர்மன் அசோகன்சாலமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் அந்தோனியம்மாள், துணைத் தலைவர் சைமன்ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.