தினகரன் 22.06.2010
விழுப்புரம் நகரில் ரூ.13 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்
விழுப்புரம், ஜூன் 22: விழுப்புரம் நகரில் ரூ.13 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை போடும் பணியை நகர்மன்றத்தலைவர் ஜனகராஜ் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் நகரில் ரூ.30 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது.
நகராட்சி ஒப்புதலை பெற்று குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வையில் பணிகள் நடக்கிறது. 90 கிமீ., தூரத்திற்கு இப்பணிகள் நடைபெற்று வருகிறது. 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. சேவியர் காலனி, எருமணதாங்கல், கா.குப்பத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தது. இந்த பள்ளங்களால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்று நகர மக்கள் கூறி வந் தனர்.
அவர்களது கோரிக் கையை ஏற்று பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்ததும் நகரம் முழு வதும் சிமெண்ட் சாலைகள் போடப்படும் என்று அமைச்சர் பொன்முடி, நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் ஆகியோர் உறுதி யளித்தனர். 2010ம் ஆண்டு இறுதிக்குள் சிமெண்ட் சாலை போடப்பட்டிருக் கும் என்று நம்பிக்கையுடன் கூறினர்.
இதையடுத்து சிமெண்ட் சாலை போடுவதற்கான நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுப்பட்டனர். ரூ.13 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை போடுவதற்காக திட்டமிடப்பட்டு நிதி யுதவி கேட்டு தமிழக அரசுக்கு நகராட்சி நிர் வாகம் திட்ட அறிக்கையை அனுப்பியது. இந்த பணி கள் குறித்து பரிசீலித்து தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.
இதன்பின்னர் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களுக்கு தடையின்மை சான்று கேட்டு குடிநீர் வடிகால் வாரியத்திடம் நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது. அதன்படி பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட 15 வீதிகளின் பட்டியல் வழங்கப்பட் டது.
இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக, விழுப்புரம் நாப்பாளையத்தெரு வில் ரூ.4.10 லட்சம் மதிப் பில் 160 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக் கும் பணி தொடங்கியது. இந்த பணிகளை துவக்கி வைத்து நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் ஆய்வு செய்தார்.