Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நபார்டு வங்கி உதவியுடன் 398 பேரூராட்சிகளில் சாலை மேம்பாடு

Print PDF

தினகரன் 28.06.2010

நபார்டு வங்கி உதவியுடன் 398 பேரூராட்சிகளில் சாலை மேம்பாடு

வேலூர், ஜூன் 28: தமிழகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் பல்வேறு உள்கட்டமைப்புப்பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதில் சாலைமேம்பாட்டு பணி மற்றும் கட்டண கழிவறைகளும் கட்டப்படுகின்றன.

தமிழகத்தில் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு 52 பேரூராட்சிகளில் 85 பொது கட்டண கழிவறை வளாகங்கள் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.

அதேபோல் மாநிலத்தில் உள்ள 398 பேரூராட்சிகளில் 684 சாலைகள் தரம் உயர்த்தப்பட்ட சாலைகளாக மாற்றப்படுகின்றன. இந்த சாலைகள் தரம் உயர்த்த மேற் கொள்ளப்படும் பணிகளுக்காக ரூ.45 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.