தினமணி 22.07.2010
கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.21 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்கிருஷ்ணகிரி, ஜூலை 21: கிருஷ்ணகிரி நகராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து ரூ.21 லட்சம் மதிப்பிலான சாலை புதுப்பிக்கும் பணிகளை டி.செங்குட்டுவன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் வார்டு எண்
5-ல் உள்ள குப்பமேடுத் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கும் பணி, பெங்காலி தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் கான்கிரிட் சாலைகள் புதுப்பிக்கும் பணி, 8-வது வார்டில் நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பில் தார் சாலை புதுப்பிக்கும் பணி, 10-வது வார்டு டி.பி.சாலையில் ரூ.4 லட்சம் மதிப்பில் தார் சாலை புதுப்பிக்கும் பணி மற்றும் 14-வது வார்டு பாப்பாரப்பட்டியில் உள்ள மயானத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஈமச்சடங்கு மண்டபம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி என ரூ.21 லட்சம் மதிப்பிலான பணிகளை கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ டி.செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப்
, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி, மீனா, பழனி, ஆணையர் பௌலோஸ், திமுக நகரச் செயலர் நவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.