தினகரன் 27.07.2010
மாங்காட்டில் ஸீ1 கோடியில் தார், சிமென்ட் சாலைகள்
பூந்தமல்லி, ஜூலை 27: மாங்காடு பகுதியில் ஸீ1 கோடியில் தார், சிமென்ட் சாலைகள் அமைப்பது என்று பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாங்காடு பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில், சக்ரா நகர், மசூதி தெரு, பட்டு பஜார் தெரு, மேல்மாநகர் குறுக்கு தெரு, சக்தி நகர், தெற்கு காமாட்சி நகர், ரகுநாதபுரம் கண்டோன்மென்ட், சாதிக் நகர் பிரதான சாலை, காமாட்சி நகர் விரிவாக்கம் மற்றும் பட்டு எஸ்.கே.எம்.நகர் போன்ற பகுதிகளில் தார் சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் ரூ.1 கோடி செலவில் அமைப்பது என்றும், மங்களபுரம் பகுதியில் மழைநீர் கால்வாய் மற்றும் மாந்தியம்மன் கோயில் தெருவில் பொதுப் பணித்துறை கால்வாய் குறுக்கே கல்வெட்டு விரைவில் கட்டுவது என்றும், இதற்கான பணி ஆணைகள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.